
விஜயை பார்த்து அஸ்வத் மாரிமுத்து அழுத்து ஏன் ?

அஜித்துடன் மோதுவதை தவிர்த்திர் தனுஷ்.

இசையமைப்பாளர் தமன் பற்றி பலரும் அதிருப்தி.

விஜயின் ‘சச்சின்’ ரீ ரிலீஸ் செய்யப்படுவது ஏன் ?

ஏவி. எம். சொல்லியும் கண்ணதாசன் மாற்ற மறுத்த பாடல் வரிகள்.

மோகன்லால் படத்தின் டிரைலரை வெளியிட்ட ரஜினி சொன்னது என்ன ?

பகவதி ரீ ரிலீஸ், கில்லி வசூலை முறியடிக்குமா ?

கமல் நடித்த இந்தியன் 3 வெளியாகாது. ஏன் ?

மோடியிடம் இளையராஜா சொன்னது ?

ரஜினி வசனத்தைப் பேசிக் காட்டி , சினிமாவுக்கு வந்த விஜய்.

ரஜினியின் கூலி ரிலீஸ் எப்போது ?

பிந்துகோஷின் பரிதாபமான கடைசி நாட்கள்.

ரூ 120 கோடிக்கு ரஜினி படத்தை வாங்கியது அமேசான்.

‘கைதி’ படத்தின் 2-ஆம் பாகம் எப்போது தெரியுமா ?

டிராகன் படத்தில் நிகழ்ந்த திடீர் மாற்றம்.

அஜித்தின் குட் பேட் அக்லியும் சூர்யாவின் ரெட்ரோவும் ஒரே கதை !

கேரள நடிகையிடம் ரஜினி பெயரைச் சொல்லி மோசடி.

இயக்குநர் ஆகிறார் ரவி மோகன்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் வடிவேலுடன் நடிக்க நடிகை மறுப்பு.

கண்ணதாசனுக்கே பாடல் சொன்ன நாகேஷ்.

‘பேட்ட’ பட இயக்குநருடன் மீண்டும் இணைகிறார் ரஜினி.
பிரபாஸ் படத்தில் விஜய சேதுபதி !
‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாசுடன் நம்ம ஊர் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க உள்ளார். தெலுங்கு திரை உலகில் இன்றைய தினம் மிகவும் ‘பிஸி’யாக இருக்கும் நடிகர் பிரபாஸ்.இப்போது அவர் ‘தி ராஜா சாப்’என்ற படத்தில் நடித்து வருகிறார். பாவ்ஜி, ஸ்பிரிட், கண்ணப்பன், கல்கி -2,சலார் -2 ஆகிய படங்களையும் பிரபாஸ் கையில் வைத்துள்ளார். கண்ணப்பன் படத்தில் அவருக்கு கவுரவ வேடம். ‘தி ராஜா சாப்’ படத்தை முடித்து விட்டு,பிரபாஸ் ‘ஸ்பிரிட்’
விஜயை பார்த்து அஸ்வத் மாரிமுத்து அழுத்து ஏன் ?
‘ஓ..மை கடவுளே’ படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன அஸ்வத் மாரிமுத்து, முதல் படத்திலேயே, கோடம்பாக்கத்தின் கவனத்தை ஈர்த்தார். தனது அடுத்த படமான ‘டிராகன் ‘ படத்தில் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக்கினார். கயாடு லோஹர், அனுபமா பரவேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்த ‘டிராகன்’ 150 கோடி ரூபாயை தாண்டி வசூலித்து தமிழ் திரை உலகை மிரள வைத்துள்ளது. டைரக்டர் அஸ்வத் மாரிமுத்துவை அண்மையில் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த், நேரில் அழைத்து பாராட்டினார். இந்த
அட்லீ படத்தில் அல்லு அரஜூனுக்கு இரட்டை வேடம்.
அட்லீ டைரக்டு செய்யும் புதிய படத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘புஷ்பா’ இரண்டு பாகங்களும் பெரிய வெற்றி பெற்று, வசூல் குவித்தன. அதன் ஹீரோ அல்லு அர்ஜுன் , இன்றைய தினம் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்துள்ளார். ‘புஷ்பா-2 ‘ க்குப் பிறகு அல்லு அர்ஜுன் , நம்ம ஊர் இயக்குநர் அட்லீ டைரக்ஷனில் நடிக்க உள்ளார். இது ,
அஜித்துடன் மோதுவதை தவிர்த்திர் தனுஷ்.
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக கலைஞராக உருவெடுத்துள்ள தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் அடுத்த மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் அதே நாளில் அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படமும் வெளியாகிறது.ஆனால் ‘இட்லி கடை’ ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அஜித் படத்துடன் மோதினால், தனது படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்பதால் இட்லிகடை’ வெளியீட்டை தள்ளி வைக்க சொல்லி
இசையமைப்பாளர் தமன் பற்றி பலரும் அதிருப்தி.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் ஒரே நேரத்தில் டைலக்டோ செய்த படங்கள், இந்தியன் -2 மற்றும் கேம் சேஞ்சர். ‘கேம் சேஞ்சர்’ படத்தின் பாடல்களுக்கு மட்டும் 90 கோடி வரை ஷங்கர் செலவு செய்துள்ளார். ஆனாலும் படம் தோல்வி அடைந்தது. பாடல்களும் ஹிட் ஆகவில்லை. இது குறித்து கேம் சேஞ்சர் இசை அமைப்பாளர் தமனிடம் கேட்டபோது, ‘பாடல்களில் நடன அசைவு சரி இல்லை- நடன இயக்குநர்கள்சரியாக நடனம் அமைக்கவில்லை’ என்று கூறி,
விஜயின் ‘சச்சின்’ ரீ ரிலீஸ் செய்யப்படுவது ஏன் ?
‘விஜய்யின் ‘சச்சின்’ திரைப்படம் அடுத்த மாதம் மறு வெளியீடு செய்யப்படுகிறது . அரசியலில் குதித்துள்ள ‘இளையதளபதி’ விஜய் நடிக்கும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. தமிழக சட்டசபை தேர்தல் நெருக்கத்தில் இந்தப்படம் ரிலீஸ் ஆகிறது. அவர் நடித்த பழைய படங்கள் இப்போது, தூசி தட்டி ரீ – ரிலீஸ் ஆகின்றன. சில மாதங்களுக்கு முன் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் மீண்டும் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றது. நேற்று ‘பகவதி’ வெளியானது.
ஏவி. எம். சொல்லியும் கண்ணதாசன் மாற்ற மறுத்த பாடல் வரிகள்.
கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலின் வரியை மாற்றச்சொல்லி, ஏ.வி.மெய்யப்ப செட்டியார் வலியுறுத்தியும் ,கவிஞர் மறுத்து விட்டார். அந்த பாடல் என்ன? 1962 ஆம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் ‘பார்த்தால் பசி தீரும்’. சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்ரி, சவுகார் ஜானகி, உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.சி.திரிலோகச்சந்தர் கதை எழுத, ஏ.வி.எம்.நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கண்ணதாசன் பாடல்கள் எழுதியுள்ளார். சிவாஜியும், ஜெமினியும் ராணுவத்தில் வேலை
மோகன்லால் படத்தின் டிரைலரை வெளியிட்ட ரஜினி சொன்னது என்ன ?
மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ படத்தின் டிரெய்லரை ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். பிரிதிவிராஜ் இயக்கிய’ லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘எம்புரான்’. இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இந்த டிரெய்லரை வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், ‘‘எனது அருமை நண்பர் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜின் “எம்புரான்” பட டிரெய்லரை கண்டு ரசித்தேன- மிக அற்புதமான டிரெய்லர்- படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற கடவுள் ஆசிர்வதிக்கட்டும், படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்’’ எனத்
பகவதி ரீ ரிலீஸ், கில்லி வசூலை முறியடிக்குமா ?
கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படமான ‘பகவதி’, நாளை, ரீ –ரிலீஸ் ஆகிறது. ‘இளையதளதி’ விஜயின் நடிப்புத்திறமையை வெளிக்கொணர்ந்த படம் ‘பூவே உனக்காக’, அவரை ஆக்ஷ்ன் ஹீரோ ஆக்கிய படம் ‘பகவதி’. ஏ. வெங்கடேஷ் டைரக்ட் செய்திருந்தார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த படம். விஜயுடன், ஜெய், ரீமா சென், வடிவேலு, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தேவா இசையமைப்பில்
கமல் நடித்த இந்தியன் 3 வெளியாகாது. ஏன் ?
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் -3 ‘படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் கடந்த 1996-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனை வைத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கினார், ஷங்கர். படத்தை முடிக்க ஐந்தாறு ஆண்டுகள் ஆயிற்று. ‘இந்தியன் 2’ திரைப்படம் கடந்த ஆண்டு
மோடியிடம் இளையராஜா சொன்னது ?
நீங்கள் இசை அமைப்பாளர் இளையராஜா, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 1976 ஆம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் இளையராஜாவை அறிமுகம் செய்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்தார். அவரது பாடல்கள் காலம் கடந்து பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனையை
ரஜினி வசனத்தைப் பேசிக் காட்டி , சினிமாவுக்கு வந்த விஜய்.
சூப்பர் ஸ்டார் ‘ரஜினிகாந்த் வசனத்தை பேசி , அப்பாவிடம் விஜய் ,சினிமாவுக்கு சான்ஸ் கேட்டுள்ளார். பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் மகன் விஜய்க்கு பள்ளி பருவத்திலேயே சினிமா ஆசை இருந்தது. தனது மகன் நடிப்புக்கு தகுதியானவரா என்று அவருக்குத் தெரியவில்லை. ஆனால் விஜய் தந்தையின் எண்ணத்தை மாற்றியது எது என்றால் அது ரஜினிகாந்த். 2010 -ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் ரசிகரான விஜய் இப்படி பேசினார்: ‘
ரஜினியின் கூலி ரிலீஸ் எப்போது ?
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் கூலி’. அவருடன் சத்யராஜ், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கி உள்ளது. இது
பிந்துகோஷின் பரிதாபமான கடைசி நாட்கள்.
நகைச்சுவை நடிகை பிந்துகோஷின் கடைசி நாட்கள் பெரும் போராட்டமாக இருந்து உள்ளன. பிறரை சிரிக்க வைத்தவர் போதிய பணம் இல்லாத்தால் பரிதாபமாக இறந்துவிட்டார். அவருக்கு வயது 76. மனோரமா , கோவை சரளா வரிசையில் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகை , பிந்துகோஷ். களத்தூர் கண்ணம்மா படத்தில் கமலஹாசனுடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார், இயற்பெயர் விமலா, சினிமாவுக்காக, பிந்துகோஷ், என மாற்றிக்கொண்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா, ரஜினிகாந்த்
ரூ 120 கோடிக்கு ரஜினி படத்தை வாங்கியது அமேசான்.
‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்தின் ஓடிடி உரிமையை 120 கோடி ரூபாய்க்கு அமேசான் நிறுவனம் வாங்கி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பான் இந்தியா’ படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் கூலியில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சவுபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு பிறகு,
‘கைதி’ படத்தின் 2-ஆம் பாகம் எப்போது தெரியுமா ?
‘கைதி’ திரைப்படம் வெளிவந்து 5 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், ‘கைதி ‘இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதன் நாயகன் கார்த்தி. வெற்றிப்படம் கொடுக்கும் நடிகர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் . அதன் இரண்டாம் பாகம். ‘பாட்ஷா’ ஓடியதும், ‘எப்போ பார்ட் -2’ என ரஜினியை துளைத்து எடுத்தார்கள். அவர் ‘ நோ’ என உறுதியாக நின்றார். தனது படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதில்லை என்பது ரஜினியின் கொள்கை. முதன் முறையாக
டிராகன் படத்தில் நிகழ்ந்த திடீர் மாற்றம்.
‘டிராகன்’ படத்தில் கீர்த்தி கேரக்டரில்தான் , கயாடு லோஹர் முதலில் நடிப்பதாக இருந்தார். கடைசி நேரத்தில் அவருக்கு பல்லவி வேடத்தை கொடுத்துள்ளார், இயக்குநர் அஸ்வத் . அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான படம் ‘டிராகன்’. பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், உள்ளிட்டோர் நடித்த, இந்த படம் கடந்த மாதம் 21 ஆம் தேதி வெளியானது. வசூலில் ‘டிராகன்’ படம் சாதனை படைத்து வருகிறது.இந்த 18 நாட்களில் ரூ.
அஜித்தின் குட் பேட் அக்லியும் சூர்யாவின் ரெட்ரோவும் ஒரே கதை !
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படமும் சூர்யாவின் ‘ரெட்ரோ’ படமும் ஒரே கதைக்களத்தை மையமாக கொண்டவை என்ற தகவல் கோடம்பாக்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.தமிழ் புத்தாண்டை யொட்டி, அடுத்த மாதம் 10 ஆம் தேதி
எம்.ஜி.ஆர்.- ன் நிறைவேறாத ஆசைகள் !
கல்கியின் ‘பொன்னியின் செல்வன் ‘ நாவலை சினிமாக்எடுக்க வேண்டும், அதில் தான் , நாயகனாக நடித்து, இயக்கி, தயாரிக்க வேண்டும் என்பது எம். ஜி.ஆரின் ஆசை. அது ஈடேறவில்லை. ஆப்பிரிக்க நாட்டு காடுகளில் ஒரு படம் செய்ய வேண்டும் என்பதும் அவரது விருப்பம்.தனது ‘உலகம் சுற்றும் வாலிபன் ‘ படத்தின் கடைசியில் அந்த படத்தின் ‘டைட்டில்’பெயர் கூட போட்டிருந்தார். ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’.இதற்கான லோகேஷனையும் அவர் அங்கு சென்று பார்த்து
கேரள நடிகையிடம் ரஜினி பெயரைச் சொல்லி மோசடி.
‘ஜெயிலர் -2’படத்தில் ரஜினிகாந்த் மனைவியாக நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லி , மலையாள நடிகையிடம், பணம் பறிக்க ஒரு கும்பல் முயன்றுள்ளது. இதனை அந்த நடிகையே அம்பலப்படுத்தியுள்ளார். மலையாளத்தில் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற சினிமா மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் ஷைனி சாரா. மலையாள படங்களில் கேரக்டர் வேடங்களில் நடித்து வருகிறார். அவரிடம் பணம் பறிக்க தமிழகத்தை சேர்ந்த மோசடி கும்பல் முயன்றுள்ளது. இந்த ஆசாமிகளிடம் ஏமாந்து விட வேண்டாம்
இயக்குநர் ஆகிறார் ரவி மோகன்.
நடிகர் ரவி மோகன், இப்போது .தான் நடித்து கொண்டிருக்கும் படங்களை முடித்துவிட்டு, இயக்குநராக களமிறங்க முடிவு செய்துள்ளார்.. படத்தொகுப்பாளர் மோகனின் இரண்டாவது மகன் ரவி. ஜெயம் எனும் படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இதனால் தனது பெயரை ‘ஜெயம் ரவி’ என மாற்றிக்கொண்டு படங்களில் நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு, ஜெயம் ரவிக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. இருவரும் பிரிந்து விட்டார்கள்.
கோடி ரூபாய் கொடுத்தாலும் வடிவேலுடன் நடிக்க நடிகை மறுப்பு.
‘கோடி ரூபாய் தந்தாலும் வடிவேலுவுடன் மட்டும் நடிக்க மாட்டேன் ‘ என கவர்ச்சி நடிகை சோனா சொல்லி இருப்பது கோடம்பாக்கத்தில் புயலை கிளப்பியுள்ளது.. 2001 ஆம் ஆண்டு அஜித் ஹீரோவாக நடித்து வெளியான ‘பூவெல்லாம் உன் வாசம் ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனா. தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களிலேயே சோனா தோன்றி வந்தார். ‘ பத்து
கண்ணதாசனுக்கே பாடல் சொன்ன நாகேஷ்.
’ இயக்குனர் சிகரம்’ கே.பாலச்சந்தர். தான் இயக்கிய அனைத்து படங்களிலும், நாகேஷுக்கு ஒரு கேரக்டரை வைத்திருப்பார் . ரஜினிகாந்த் நடிப்பில் பாலச்சந்தர் இயக்கிய‘தில்லுமுல்லு ‘படத்தில் நடிகராகவே நடித்திருப்பார்,நாகேஷ், கே.பாலச்சந்தர் –நாகேஷ் கூட்டணி அமைத்து .1967 ஆம் ஆண்டு வெளியான படம் அனுபவி ராஜா அனுபவி. நாகேஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். முத்துராமன், மனேரமரா, மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.என்.லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, அனைத்து பாடல்களையும், கவியரசர் கண்ணதாசன்
‘பேட்ட’ பட இயக்குநருடன் மீண்டும் இணைகிறார் ரஜினி.
பேட்ட’ டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் ,ரஜினிகாந்துடன் மீண்டும் இணைய உள்ளார். தொடர் தோல்விகளை கொடுத்து வந்த ‘சூப்பர்ஸ்டார்’ரஜினி காந்துக்கு மிகப்பெரிய வெற்றியை தந்த படம் ‘பேட்ட’. இதனை ரஜினியின் ரசிகரான கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப்படம் 2019 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் திரைக்கு வந்தது. படம் அமோக வெற்றி பெற்றது. அதன் பிறகு இளம் இயக்குநர்களுடன் ரஜினி கூட்டணி அமைத்தாலும் மீண்டும் கார்த்திக்
சங்கீதா, 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு வருகிறார்.
கேரளாவை சேர்ந்த சங்கீதா, 1978 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘சினேகிகன் ஒரு பெண்ணு’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ‘என் ரத்தத்தின் ரத்தமே ‘படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக காலடி எடுத்து வைத்தார்.பிறகு, தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்தார். விஜயுடன் சங்கீதா இணைந்து நடித்த ‘ பூவே உனக்காக’ படம் அவரை தமிழகம் முழுவதும் பிரபலமாக்கியது.விக்ரமன் இயக்கி இருந்தார். வெள்ளிவிழா கொண்டாடிய படம். ஒளிப்பதிவாளர்
நடிகையை வறுத்தெடுத்த அமைச்சர்
பெங்களூருவில் அண்மையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில், நடிகை ராஷ்மிகா மந்தனா, கலந்துகொள்ளவில்லை. கன்னட சினிமா மூலம் திரைஉலக பயணத்தை ஆரம்பித்த ராஷ்மிகா, விழாவில் பங்கேற்காதது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிக்குமார் கவுடா, மேடையில் வெளிப்படையாகவே பேசினார். ‘ராஷ்மிகா மந்தனா தனது சினிமா வாழ்க்கையை, ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட படம் மூலம் கர்நாடகாவில் தொடங்கினார் –
‘ குட் பேட் அக்லி’ பிரிவியூ ஷோ ஒரு நாள் முன்னதாக !
‘குட் பேட் அக்லி’படத்தின் ப்ரீமியர் காட்சியை , பட ரிலீசுக்கு முதல் நாள் இரவிலேயே நடத்த அதன் விநியோகஸ்தர் முடிவு செய்துள்ளார். ‘விடாமுயற்சி ‘படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே ‘அல்டிமேட்ஸ்டார்’ அஜித் நடித்த திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள ‘குட்
படக்காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சியில் ராஜமவுலி.
மகேஷ்பாபு படத்தின் ‘ஷுட்டிங்’ காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. ‘ஆர் ஆர் ஆர்’ படத்துக்கு பிறகு எஸ்.எஸ். ராஜமவுலி ‘பான் வேர்ல்டு ‘படத்தை இயக்கி வருகிறார். மகேஷ்பாபு நாயகனாக நடிக்கிறார், இருவரும் இணையும் முதல் படம் இது. தற்காலிமாக ‘SSMB 29’ என படத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. மகேஷ்பாபு தவிர, பிரியங்கா சோப்ரா, பிருதிவிராஜ் ஆகிய இருவரும் இந்த படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. ரூ. 1000
கற்பகம் படத்தில் எம்.ஜி.ஆர். நடிக்க மறுத்தது ஏன் ?
எம் ஜி ஆர் படங்களை பொருத்தவரை, அவர்தான் , தனது படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களையும் முடிவு செய்வார். அவரது, இந்த பிடிவாதம், கே எஸ் கோபாலகிருஷ்ணனிடம் பலிக்கவில்லை. ஏன் ? பார்க்கலாம். குடும்பப்பாங்கான படங்களை வழங்குவதில் கில்லாடியான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், 1962 ஆம் ஆண்டு வெளியான சாரதா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதனை அடுத்து தெய்வத்தின் தெய்வம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த இரு படங்களுமே நல்ல
டிராகன் இந்தியில் ரிலீஸ், வெற்றி பெறுமா?
பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. ரசிகர்கள் அந்தப்படத்தை கொண்டாடி தீர்த்தனர்.இளைஞர்கள் மத்தியில் பிரதீப் ரங்கநாதனுக்கு ,தனி ‘கிரேஸ் ‘ உருவானது. இந்த நிலையில் ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஸ்வந்த் மாரிமுத்து, ‘இளம் ஹீரோ’பிரதீப் ரங்கநாதனை வைத்து ‘டிராகன்’ என்ற படத்தை டைரக்டு செய்தார். இதில் , காயது லோகர், அனுபமா பரமேசுவரன், ஜார்ஜ் மரியன், கே. எஸ். ரவிக்குமார், கவுதம்