
பிரபாஸ் படத்தில் நடிக்கு தீபிகாவுக்கு ரூ 20 கோடி சம்பளம்.

அஜித், 8 மாதங்களில் 42 கிலோ எடையைக் குறைத்தது எப்படிங்க ?

சந்தானம் பணிந்தது எப்படி ?

துணை முதல்வர், மீண்டும் நடிக்க வருகிறார்.

சந்தானம் படத்திற்கு சிக்கல்.

பெருமாளை கிண்டல் செய்தாரா சந்தானம் ?

உங்கிட்ட அடி வாங்கனுமா? – நம்பியார்.

The Diplomat- நெகிழச் செய்யும் இந்திப்படம்

சிம்புக்கு கமல் போட்ட உத்தரவு.

பிரேம்குமாருக்கு காரை சூர்யா கொடுத்தது ஏன் ?

கதாநாயகனாகிறார் லோகேஷ் கனகராஜ்

யோகிபாபுவுக்கு பணம் தர வேண்டியவர்கள்

ரூ 10 கோடியை நன்கொடையாக கொடுத்து சூர்யா அசத்தல்.

அழுவது ஏன் ? சமந்தா விளக்கம்.

ஓடிடியில் அஜித் படம்- வெற்றி பெறுமா ?

கனவுக் கன்னி ஶ்ரீதேவி படம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ்.

மீண்டும் நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடிக்க வந்தது ஏன் ?

சூர்யாவுக்கு ரசிகன் சொல்லும் யோசனை.

டூரிஸ்ட் பேமிலி – வெற்றிக்கு காரணம் சசிகுமாரா ? இயக்குநரா ?

எம்.ஜி.ஆர். ன் வெற்றி ரகசியம்.

கூலி ரொம்ப நல்லா இருக்கு – அனிருத் புகழாரம்.
பிரபாஸ் படத்தில் நடிக்கு தீபிகாவுக்கு ரூ 20 கோடி சம்பளம்.
இந்தி சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்க.த்தில் தீபிகா நடிக்க உள்ளார். ‘ஸ்பிரிட்’ என இந்த படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தபடத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடிக்கிறார், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை தீபிகா படுகோன் ரூ. 20 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இதற்கு தயாரிப்பாளர் ஓகே சொல்லி விட்டார். தீபிகா இருந்தால், படம் சர்வதேச சந்தையில் நல்ல விலைக்கு போகும் என்பது
அஜித், 8 மாதங்களில் 42 கிலோ எடையைக் குறைத்தது எப்படிங்க ?
‘ரேஸ்’ பிரியரான அல்டிமேட் ஸ்டார் அஜித், கார் பந்தய வெற்றிக்காக 8 மாதத்தில் 42 கிலோ எடையைக் குறைத்துள்ளார். இது குறித்து அஜித் அளித்துள்ள பேட்டியின் விபரம்:. ‘’கார் பந்தயத்தில் பங்கேற்க எனக்கு நிறைய உடற்தகுதி தேவை. எட்டு மாத கால இடைவெளியில் நான் 42 கிலோ எடையைக் குறைத்தேன். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எனது எடையை குறைக்க தொடங்கினேன். உணவில் கட்டுப்பாடு, நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்
சந்தானம் பணிந்தது எப்படி ?
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இதில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, ராஜேந்திரன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் இந்த படம் இன்று திரைக்கு வந்துள்ள நிலையில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. இப்படத்தில்,இடம் பெறும், ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பாடலில், திருப்பதி வெங்கடாஜலபதியை இழிவுப்படுத்தும் வகையில் வரிகள்
துணை முதல்வர், மீண்டும் நடிக்க வருகிறார்.
‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண், ஜனசேனா எனும் கட்சியின் தலைவரும் ஆவார். சினிமா, அரசியல் என இரு குதிரைகளில் பயணித்து வருகிறார். இப்போது ஆந்திர மாநில துணை முதலமைச்சராக உள்ள பவன்,.பதவிக்கு வரும் முன்பு சில,படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். அரசியல் பணி மற்றும் அரசு பணியில் தீவிரமாக இருந்ததால் அந்த படங்களின் வேலைகள் முடங்கி கிடந்தன. அவற்றை முடித்துக்கொடுக்க நினைத்த பவன், மீண்டும் படப்பிடிப்பு அரங்குகளுக்கு வர ஆரம்பித்துள்ளார். அவர்
சந்தானம் படத்திற்கு சிக்கல்.
சந்தானம் நடிப்பில் வெளிவர உள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தில் பக்தி பாடல் பயன்படுத்தியதற்காக திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான சந்தானம். இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படத்தின் 4-வது பாகமாக உருவாகியுள்ள இந்த படத்தை, எஸ். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள
பெருமாளை கிண்டல் செய்தாரா சந்தானம் ?
பெருமாளை கிண்டல் செய்யவில்லை என்கிறார் சந்தானம்! — சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இதில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, ராஜேந்திரன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை மறு நாள் வெளியாகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தானம் கூறியதாவது: இது ,ஒரு நல்ல கதை, திரைக்கதை,
உங்கிட்ட அடி வாங்கனுமா? – நம்பியார்.
‘ எம்.ஜி.ஆர், சிவாஜி கிட்டே அடி வாங்கியாச்சி, உன்ன மாதிரி ஆட்கள் கிட்டேயும் அடி வாங்கனுமா ?’ என பாக்யராஜை நம்பியார் கலாய்த்த ஒரு சம்பவம் வில்லனாக இருந்த நம்பியாரை காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக மாற்றிய பெருமை, பாக்யராஜை சேரும். நம்பியாரை தனது தூறல் நின்னு போச்சு படத்தில் நடிக்க வைக்க, அவர் வீட்டுக்கு சென்றுள்ளார், பாக்யராஜ். அப்போது அவரிடம் என்ன விஷயம் என்று நம்பியார் கேட்க, என்
The Diplomat- நெகிழச் செய்யும் இந்திப்படம்
தி டிப்ளோமேட். திருமணம் என்கிற பெயரால் ஏமாற்றப்பட்டு பாகிஸ்தானுக்குள் சிக்கிக் கொள்கிறார் ஓர் இந்தியப் பெண். பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் டெபுடி ஹைகமிஷனரான J.P. சிங் அந்தப் பெண்ணை எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதுதான் படம். நெட்பிளிக்ஸ் டைமிங்கில் இறக்கியிருக்கிறத அல்லது தற்செயலோ என்று தெரியவில்லை. படம் விறுவிறுப்பாகவும் நெகிழ்வாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது. உயர்பொறுப்பில் உள்ள ஓர் அதிகாரி, தனது அதிகாரத்தை நோ்மையாகவும் மனிதாபிமானத்தோடும் துணிச்சலோடும் பயன்படுத்தினால் ஓர் அப்பாவியை எப்படி
சிம்புக்கு கமல் போட்ட உத்தரவு.
‘தக் லைஃப்’ படம் வெளியாக ஒரு மாதமே உள்ள நிலையில் படத்தின் புரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம் கமலை பேட்டி எடுக்க சென்னைக்கு வந்துள்ளனர். அப்போது கமல், ‘தக் லைஃப்’ படத்தில் நடித்த சிம்பு, அசோக் செல்வன், அபிராமி, திரிஷா ஆகியோரையும் பேட்டி கொடுக்கும்படி கூறி உள்ளார். . அதேபோல் நெட்பிளிக்சிடமும் நான் மட்டும் பேட்டி
பிரேம்குமாருக்கு காரை சூர்யா கொடுத்தது ஏன் ?
பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி உள்ளிடோர் நடித்த படம் ‘மெய்யழகன்’. இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், ஓடிடியில் வெளியாகி பரவலாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் பிரேம்குமாருக்கு நடிகர் சூர்யா வெள்ளை நிற மஹிந்திரா தார் காரை பரிசளித்துள்ளார். இதுகுறித்து பிரேம்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது: “மஹிந்திரா தார் எனக்கு எப்போதும் ஒரு கனவு வாகனமாக இருந்தது. வெள்ளை நிறத்தில் தார் ராக்ஸ்
கதாநாயகனாகிறார் லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிக்கவுள்ள படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இயக்குநர்களுக்கு ‘டூயட்’ பாட ஆசை வரும். லோகேஷ் கனகராஜுக்கும் அந்த ஆசை வந்துள்ளது. அவரது விருப்பம் கனிந்துள்ளது. ‘கூலி’ படத்துக்கு பின் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கவுள்ளார். இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார். தற்போது அருண் மாதேஸ்வரன் கதையை இறுதி செய்து, முதற்கட்டப் பணிகளை தொடங்கியிருக்கிறார்கள். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இப்படத்துக்காக
யோகிபாபுவுக்கு பணம் தர வேண்டியவர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, உச்ச நடிகர்களின் படங்களில் நடித்து வந்தாலும், இடையில் ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். யோகி பாபு நடித்துள்ள கஜானா படத்தின் விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ராஜா, ரூ.7 லட்சம் தந்தால் தான் யோகிபாபு படத்தின் புரோமோஷன் விழாவுக்கு வருவதாக சொல்கிறார். அதனால் தான் இப்போது வரவில்லை. இவர் நடிகனாக இருக்கவே லாயக்கு இல்லை’
ரூ 10 கோடியை நன்கொடையாக கொடுத்து சூர்யா அசத்தல்.
‘ரெட்ரோ’ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் இருந்து ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்காக வழங்கியுள்ளார் நடிகர் சூர்யா. இது தொடர்பாக சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘பகிர்தலே மிகச் சிறந்த மகிழ்ச்சி. நடிகனாக எனக்கு அடையாளம் கொடுத்து, என் முயற்சிகளை அங்கீகரித்து உயர்த்திய இந்த சமூகத்திடம், வெற்றியைப் பகிர்ந்து கொள்வது எப்போதும் மனநிறைவை தருகிறது. ‘ரெட்ரோ’ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த பேராதரவு, மகிழ்ச்சியான வெற்றியைப் பரிசளித்து இருக்கிறது. கடினமான சூழல்
அழுவது ஏன் ? சமந்தா விளக்கம்.
முன்னணி நடிகை சமந்தா.தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களிள் நடித்து வருகிறார். 2023 ஆம் ஆண்டு “திரலாலா மூவிங் பிக்சர்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சமந்தா, அந்த நிறுவனத்தின் மூலம் ‘சுபம்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படம் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. அந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில், விசாகப்பட்டினத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சமந்தா மேடையில் கண்கலங்கினார். இதற்கு
ஓடிடியில் அஜித் படம்- வெற்றி பெறுமா ?
‘அல்டிமேட்ஸ்டார்’ அஜித்குமார் நடித்த ‘விடா முயற்சி’ சொதப்பியது. எனினும் அவர் நடிப்பில் கடந்த மாதம் 10-ஆம் தேதி வெளியான திரைப்படமான “குட் பேட் அக்லி” அவர் பெயரை காப்பாற்றியது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விமர்சனங்கள் கலவையாக இருந்தது. வசூல் ரீதியாக இந்தப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. வெளியான குறுகிய
கனவுக் கன்னி ஶ்ரீதேவி படம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ்.
சிரஞ்சீவி –ஸ்ரீதேவி ஜோடியாக நடித்த ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ என்ற தெலுங்கு திரைப்படம் 1990-ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி வெளியானது. சரியாக 35 ஆண்டுகள் கழித்து அதே தினத்தில் ரீ –ரீலீஸ் ஆகிறது, அந்த படம். 90 -களில் ஸ்ரீதேவி இந்தி படங்களில் பிசியாக இருந்தார். தனது கேரக்டர், சம்பளம், ஹீரோ ஆகிய மூன்றையும் மனதில் கொண்டு,அவ்வப்போது சில தெலுங்குப் படங்களில் மட்டும் தலைகாட்டி வந்தார். அதில்
மீண்டும் நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடிக்க வந்தது ஏன் ?
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் புதிய படத்தில், சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். இது சிம்புவுக்கு 49- வது படம். ஹரீஷ் கல்யாண், இந்துஜா நடிப்பில் ஹிட்டான ‘பார்க்கிங்’ என்ற படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். கல்லூரியை கதை களமாக கொண்ட கமர்ஷியல் படம். இதில், நீண்ட இடைவெளிக்கு பிறகு கல்லூரி மாணவனாக சிம்பு நடிக்கிறார். சிம்பு மூலம் திரை உலகில் காமெடி நடிகராக
சூர்யாவுக்கு ரசிகன் சொல்லும் யோசனை.
ரசிகன் கருத்து…. ரெட்ரோ என்கிற மீன் குழம்பு ஊற்றப்பட்ட வெரைட்டி ரைஸ் சாப்பிட நேர்ந்தது…. 1978ல் ‘கன்னித்தீவு’ என்றொரு ஜெய்சங்கர் படம் வந்தது. ராதிகா, சீமா ஹீரோயின்களாக நடித்தனர். கன்னித்தீவு எனும் தீவில் கன்னிப்பெண்களை மட்டும் அத்தீவின் பூதம் போன்ற வாய் ஒன்று அழைத்துக்கொண்டுவிடும். உள்ளூர்வாசிகள் தங்கள் வீட்டுப்பெண்களை அனுப்புவர். பின் அவர்கள் திரும்பமாட்டார்கள். அதன் உண்மையை கண்டுபிடிப்பதே ஜெய்யின் வேலை.. அப்போதே சிசிடிவியெல்லாம் காண்பித்த ராமண்ணாவின் படம் அது.
டூரிஸ்ட் பேமிலி – வெற்றிக்கு காரணம் சசிகுமாரா ? இயக்குநரா ?
ரசிகனின் கருத்து… தமிழில் வரும் பல தரமான அறிமுக இயக்குநர்களால் தமிழ் சினிமாவும் உலக அளவிற்கு உயர்ந்து வருகிறது. தற்போது அந்த வரிசையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் இணைந்து உள்ளது. 24 வயது அறிமுக இயக்குநர் அபிஷன் விஜேத் இயக்கி வெளியாகியுள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் விமர்சன ரீதியாக பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. திரையரங்கு எண்ணிக்கையும் இதனால் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ்
எம்.ஜி.ஆர். ன் வெற்றி ரகசியம்.
சென்னை ராணி அண்ணாநகரில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புகள் திறப்பு விழா 1983- ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர், இதனை திறந்து வைத்துபேசினார். அதன் ஒரு பகுதி இது : “குழந்தைகள் கல்வியோடு ,நல்ல உடல் நலத்தோடும் இருக்க வேண்டும்-இதுதான் முக்கியம் –வசதி இருக்கிறதே, படித்துத்தான் சம்பாதிக்க வேண்டுமா? என்று நினைக்கக்கூடாது –அதுபோல்,ஏழைகள் ‘நாம் உழைக்கத்தான் பிறந்தோமா ? என்று எண்ணக்கூடாது – யார்
கூலி ரொம்ப நல்லா இருக்கு – அனிருத் புகழாரம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சவுபின் சாகீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கூலி’.சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கூலி படம் குறித்து அவர் அளித்துள்ள ‘அப்டேட்’இது :இந்த ஆண்டு எனது இசையில் 2 படங்கள் வெளியாகிறது. முதலில் ‘கிங்டம்’ வெளியாகும். அதன் 40 நிமிடக் காட்சிகள் பார்த்தேன். அற்புதமாக இருந்தது. அடுத்து தலைவரின் ‘கூலி’ முழுப்படமும் பார்த்துவிட்டேன்.
பெண் போலீஸ் செய்த திடீர் உதவிக்கு பாராட்டு குவிகிறது.
திருப்பூர்- பெண் காவலர் ஒருவரின் சமயோசித செயலுக்கு பாராட்டு குவிந்து உள்ளது. திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டி மையத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் ஆடையில் அதிக பட்டன்கள் இருப்பதாக கூறி தேர்வு எழுதுவதற்கு பாதுகாவலர்கள் மறுத்து உள்ளனர். இதனால் அந்தப் பெண் கண்கலங்கியபடி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து உள்ளார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் அந்த மாணவியை கடைக்கு அழைத்துச் சென்று வேறு
மதுரை ஆதினத்தை கொல்ல முயன்றது யார் ?
மதரை- மதுரை ஆதீம் தம்மை கொலை செய்வதற்கு முயற்சி நடந்ததாக கூறியதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை விளக்கம் தந்து உள்ளது. கடந்த 2-ம் தேதி மதுரை ஆதீனம் காரில் சென்னைக்கு சென்றபோது, உளுந்தூர்பேட்டை-சேலம் சாலை ரவுண்டானா அருகே, ஆதினம் சென்ற காரும், மற்றொரு காரும் மோதிக் கொண்டன. எனினும், இதுகுறித்து எந்த தரப்பிலும் புகார் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், தன்னைக் கொல்ல முயற்சி நடந்ததாக மதுரை ஆதீனம் புகார் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு இயக்குநர் சொன்ன கதையில் விஜய் நடிக்க மறுத்தது ஏன் ?
தெலுங்கு சினிமாவில் வெற்றி படங்கள் கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் கோபிசந்த் மாலினேனி. ‘க்ராக்’, ‘வீர சிம்ஹா ரெட்டி’ மற்றும் ‘ஜாட்’ படங்களை இயக்கியவர். இவருடைய படங்கள் அனைத்துமே மாஸ் கமர்ஷியல் படங்கள். தெலுங்கில் ‘க்ராக்’ மற்றும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ இரண்டுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றவை. ‘விஜய் 69’ படத்துக்கு இவரும் விஜய்யை சந்தித்து கதையைக் கூறியிருக்கிறார் ஆனால் விஜய் நடிக்க வில்லை. ஏன் ? இது குறித்து இயக்குநர்
கவிஞர்கள் வாலி, வைரமுத்துவை வைத்து ரஜினி போட்ட திட்டம் !
ரஜினிக்காக, வாலி ஒரு பாடலை எழுதி இருந்தார். அதனை கேட்காமல் பாதியிலேயே ரஜினி வெளியேறிய ஒரு சம்பவம். தமிழ் சினிமாவில் 5 தலைமுறை உச்ச நடிகர்களுகளுக்கு, பாடல் எழுதியவர் –‘ வாலிப கவிஞர் ‘வாலி. ரஜினிகாந்த ஹீரோவாக நடித்து, அவரே தயாரித்த பாபா படத்தில் வாலி ஒரு பாடல் எழுதி இருந்தார். அந்தப் பாடலுடன் ரிகார்டிங் ஸ்டூடியோவுக்கு போனார்.அங்கே ரஜினிகாந்தும் இருந்தார். ரஜினி, வாலியை வரவேற்று உட்கார வைக்கிறார். ரஜினியிடம்
அட்லீ படத்தில் நடிப்பது பற்றி அல்லூ அர்ஜூன
‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை, நம்ம ஊர் அட்லி இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் இதை தயாரிக்கிறது. ஷாருக்கானின் ஜவான் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படம், இது. “சர்வதேச தரத்துடன் இந்தியாவில் தயாராகும் ‘பான் வேர்ல்ட்’ படமாக இது இருக்கும். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில், தயாராகிறது” என படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்தப் படத்தின் போட்டோ ஷூட் மும்பை பாந்த்ராவில் உள்ள
விஜய் படத்தில் ‘ராப்’ படல்.
இளையதளபதி விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தில் ஹனுமன்கின்த் என்ற பிரபக பாடகர் ராப் பாடல் ஒன்றை பாடி இருக்கிறார்.இந்திய சினிமா உலகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் விஜய்யின் ‘ஜன நாயகன்’. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப்படம் அரசியல் ஆக்ஷன் திரில்லர் களத்தில் உருவாகி வருகிறது. விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜன நாயகன் குறித்து ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஒரு
நடக்க வந்தது ஏன் ? அஜித் விளக்கம்.
‘அல்டிமேட் ஸ்டார்’அஜித், ஒரே நேரத்தில் இரட்டை குதிரையில் சவாரி செய்பவர். ஒன்று – சினிமா மற்றொன்று – ரேஸ். தான் சினிமாவுக்கு வந்தது குறித்து அண்மையில் அஜித் மனம் திறந்து பேசியுள்ளார். அதன் விவரம் : “நான் ஒரு விபத்து நடிகன். எனக்கு ஆரம்பத்தில் நடிப்பில் எந்தவிதமான ஆர்வமும் கிடையாது நான் மிகவும் அப்பாவியாக இருந்தேன். ஒரு பத்திரிகையாளர் என்னிடம் ஏன் நடிக்க வந்தீர்கள் என்று கேட்டார். , ‘எனக்கு
சில்க் ஸ்மிதாவின் கொஞ்சும் குரல் யாருடையது ?
கடந்த 1980- களில் தமிழ் சினிமாவின் தவிர்க்க இயலாத நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவுக்கு படங்களில் டப்பிங் குரல் கொடுத்தவர், முன்னணி நடிகரின் அக்கா என்பது பலருக்கு தெரியாத விஷயம். மலையாள படங்களில் அறிமுகமான கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா, வண்டிச்சக்கரம் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர். ஒரு சில படங்களில் நாயகியாக நடித்திருந்த இவர், ரஜினி,கமல், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில், கவர்ச்சி நடனம்
அஜித் வயது என்ன ?
அஜித் பிறந்த நாள். ‘தல’ ரசிகர்கள் உற்சாகம் . நடிகர் அஜித்குமாருக்கு இன்று 53- வது பிறந்த நாள். ப்ளக் வெட்டி, இனிப்பு வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம்.