ஃபேண்டசி கதை களத்தில் உருவாகும் சிரஞ்சீவியின் புதிய படம் !

ஆகஸ்டு,23-

’அல்டிமேட் ஸ்டார்’அஜித் நடிப்பில் வெளியான ‘வேதாளம்’ படம் பெரிய வெற்றியை பெற்றது.இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ‘மெகாஸ்டார்’ சிரஞ்சீவி நடித்திருந்தார். ‘போலா சங்கர்’ என தலைப்பிடப்பட்ட இந்த படம் கடந்த 11- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ‘போலோ சங்கர்’ பெரும் தோல்வியை தழுவியது.30 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே வசூலித்துள்ளது. இதனால் நஷ்டம் அடைந்த பட தயாரிப்பாளருக்கு , தான் வாங்கிய சம்பளத்தில் இருந்து 10 கோடி ரூபாயை சிரஞ்சீவி திருப்பி கொடுத்தார்.

சிரஞ்சீவிக்கு நேற்று 68 -வது பிறந்தநாள்.இதனை யொட்டி அவர் அடுத்து நடிக்க உள்ள படத்துக்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ஃபேன்டஸி கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகிறது. இந்தப் படத்தை இயக்குநர் வசிஷ்டா இயக்குகிறார்.

மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘மெகா 157’ என பெயரிப்பட்டுள்ளது. படத்தை யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி ஆகிய பஞ்சபூதங்கள் நட்சத்திரத்துக்குள் அடைப்பட்டிருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப்படத்துக்கான போஸ்டர்

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *