இந்த நடிகர்கள் ரொம்ப மொசம்- பிரபல நடிகை குமுறல்.

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து பரப்புகளிலும் நீக்கமற நிறைந்திருப்பது பாலியல் புகார்கள்.

பாதிக்கப்படும் நடிகைகள் முன்பெல்லாம் இது குறித்து வெளியில் பகிர்ந்து கொள்வதில்லை.

பல ஆண்டுகளுக்கு முன் நடிகை ஹீரா, ‘குண்டு’ தயாரிப்பாளர் மீது பகிரங்கமாக பாலியல் புகார் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியது.

‘மீ டு’ இயக்கம் பிரபலமான பின்னர், இருட்டில் நடந்ததை நடிகைகள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

புதிதாக பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத், கதாநாயகர்கள் மீது புகார் பட்டியல் வாசிக்கிறார்.

கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் நடித்த மல்லிகா ஷெராவத், சிம்புவின் ‘ஒஸ்தி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் நிறைய பட வாய்ப்புகளை இழந்ததாக மல்லிகா ஷெராவத் குற்றம் சாட்டி உள்ளார்.

‘பட வாய்ப்புக்காக படுக்கை அறைக்கு அழைத்த அனுபவத்தை நானும் எதிர்கொள்ள நேர்ந்தது. திகட்ட திகட்ட கவர்ச்சி வேடங்களில் நான் நடித்தது உண்மைதான். இதனால் நான் ’அந்தமாதிரி’ பொண்ணு என என் மீது முத்திரை குத்தி விட்டார்கள்.

இந்தியில் நான் அதிகமாக பிரபல நாயகர்களுடன் நடிக்க வில்லை. ஏன் தெரியுமா? அவர்கள் சொன்னதை செய்ய வேண்டும். அவர்கள் ஆசைக்கு உடன்பட வேண்டும். சில ஹீரோக்கள் காலை 3 மணிக்கு போன் செய்து படுக்கைக்கு அழைப்பார்கள்.

இணங்காவிட்டால் அவர்கள் படங்களில் இருந்து நீக்கி விடுவார்கள். அவர்கள் உட்கார சொன்னால் உட்காரணும். நிக்க சொன்னால் நிக்கணும். எனக்கு அருவருப்பு ஏற்பட்டது. எந்த நடிகரின் விருப்பத்துக்கும் நான் உடன்படவில்லை.’என குமுறி தள்ளி உள்ளார் மல்லிகா ஷெராவத்.
000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *