ஜெயிலர் படம் வெளியாகும் நாளில் சென்னையில் இருக்க விரும்பவிலலை ரஜினி காந்த் !

ஜுலை,28-

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு, இரண்டை முடித்து கொடுத்து விட்டார்.

நெல்சன் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்த மாதம்  10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால்சலாம் படத்தில் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தில் ரஜினிக்கான காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ளது.

அடுத்து லைகா தயாரிப்பில், ஞானவேலு இயக்கும் படம் உள்ளது.இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதுஆன்மிகவாதியான ரஜினிகாந்த், தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். உடல்நலக்குறைவால் சில ஆண்டுகளாக அவர் இமயமலை செல்வதை தவிர்த்துவந்தார்.

2018 ஆம் ஆண்டு ‘காலா’, ‘2.0’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்குச் சென்றார். அதன்பிறகு கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இமயமலைக்குச் செல்லவில்லை. கொரோனா நோய் முற்றிலும் அகன்றுள்ள நிலையில், மீண்டும் அடுத்த மாதம் இமயமலைக்கு செல்கிறார், ரஜினி.

6 ஆம் தேதி இமயமலை செல்லும் ரஜினிகாந்த், அங்கு ஒரு வாரம் தங்கி இருந்து, பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்கு பயணிக்கிறார் .ஜெயிலர் படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர் இமயமலையில் இருப்பார். அதற்கு முன்பாக அவர் ஜெயிலர் படம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *