• சினிமா,  

June 05, 23 மலையாள திரையுலகின் முன்னனி நடிகையான பாவனா, 2006ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் பாவனா பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பாவானாவின் 86வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்Continue Reading

  • உலகம்,  

உலகின் முதன்முறையாக சுவீடன் அரசு செக்ஸை விளையாட்டாக அங்கீகரித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடன் அரசு, செக்ஸை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ‘ஐரோப்பா சாம்பியன்ஷிப்’ என்ற பெயரில் போட்டியை நடத்தத் திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த போட்டியானது வரும் ஜூன் 8-ம் தேதி தொடங்கி, 6 வாரங்கள் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் செக்ஸ் கூட்டமைப்பின் மேற்பார்வையில் நடைபெறும்Continue Reading

  • தமிழ்நாடு,  

June 05,23 சென்னை: காயிதே மில்லத்தின் 128வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 1896ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி பிறந்த காயிதே மில்லத்தின் 128வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 3 முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், முஸ்லீம் லீக் கட்சியின் நீண்டகால தலைவருமான இருந்த காயிதே மில்லத்தை நினைவுகூரும் விதமாக சென்னை திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து முதலமைச்சர்Continue Reading

  • இந்தியா,  

June 05, 2023 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் ஆகியோர் நேற்று நள்ளிரவில் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு வலியுறுத்துமாறு கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில்தான் மல்யுத்த வீராங்கனைகள் தாங்கள் பெற்ற ஒலிம்பிக்Continue Reading

  • இந்தியா,  தமிழ்நாடு,  

June 05, 23 தமிழகத்தில் ஆசிரியர் தகுதி பெற்ற லட்சக் கணக்கான வேலையில்லா பட்டதாரிகள் இருக்கும் நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை காலியாக திமுக அரசு வைத்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், சுமார் 670 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள்Continue Reading

  • தமிழ்நாடு,  

June 05, 23 இளைஞர்களின் திறன் மற்றும் காலத்திற்கு ஏற்ப தமிழகத்தில் கல்வி முறையை மாற்ற வேண்டும் என ஊட்டியில் நடந்த மாநாட்டில் கவர்னர் ரவி பேசுகையில் குறிப்பிட்டார். நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ் பவனில் ‘உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது’ என்ற தலைப்பில் ஊட்டி ராஜ்பவனில் மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கருத்தரங்கு இன்று (ஜூன் 05) துவங்கி வரும் 7ம் தேதிContinue Reading

  • இந்தியா,  

June 05, 23 ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச பள்ளிக் கல்வியை வழங்குவதாக தொழிலதிபர் கவுதம் அதானி நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: நாட்டில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மிக மோசமான, கவலையளிக்கும் ரயில் விபத்தாக ஒடிசா சம்பவம் அமைந்துவிட்டது. ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பள்ளிக் கல்வியை அதானி குழுமம் கவனித்துக் கொள்ளும். இந்தContinue Reading

  • இந்தியா,  

June 05, 23 ஜூன் 12 நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது. அதே சமயம் பாஜகவை எதிர்க்க ஒரு வலுவான எதிரணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இதன் காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் வருகிற ஜூன் 12ஆம் தேதி நடைபெறுவதாகContinue Reading

  • தமிழ்நாடு,  

June 06, 2023 மதுவால் ஏற்படும் தொடர் உயிர் பலிகளை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது அரசு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனைக்குப் பல உயிர்கள் பலியான சில நாட்களிலேயே, மதுக்கடைகள் திறக்கும் நேரத்திற்கு முன்பே, பாரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை அருந்தியதில் இரண்டு பேர் பலியானார்கள். சயனைட் கலந்திருந்த மதுவை அருந்தியதால் மரணம் என்றுContinue Reading

  • தமிழ்நாடு,  

June 06, 23 அடுத்த ஓராண்டிற்குள் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டுவரும் அரசு மதுக்கடையில் நேற்று அதிகாலையில் மது வாங்கிய செங்கோடம்பாளையத்தைச் சேர்ந்த கணேசன் என்ற விவசாயி அதில் நஞ்சு கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நண்பகல் 12.00 மணிக்குத் தான் மதுக்கடைContinue Reading