• இந்தியா,  

மே.23 நாடு முழுவதும் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். அதேநேரத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தால் பான் எண் அவசியம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என ரிசர்வ் வங்கி அண்மையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, புழக்கத்தில் இருந்துContinue Reading

  • இந்தியா,  

எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்றும் கூட்டத்தின் தேதி மற்றும் இடம் 1 முதல் 2 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார். பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார், மத்திய பா.ஜ.க. அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கில் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நிதிஷ் குமார் நேற்று டெல்லியில் காங்கிரஸ்Continue Reading

  • இந்தியா,  

2024ம் ஆண்டு இறுதிக்குள் ராஜஸ்தானின் சாலைகள் அமெரிக்காவின் சாலைகளுக்கு இணையாக அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள பக்கா சர்னா கிராமத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பேசுகையில் கூறியதாவது: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான்Continue Reading

  • சுற்றுலா,  

மே.22 கோடை சீசனில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை குறைக்கவும், நாடு முழுவதும் 380 சிறப்பு ரயில்களில் 80 ஆயிரம் பெட்டிகளுடன் 6369 டிரிப்களை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட மக்கள் தொடர்புத்துறை அதிகாரி மரிய மைக்கேல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஆண்டு கோடை சீசனில், பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், இந்திய ரயில்வே 380 சிறப்பு ரயில்களில் 80 ஆயிரம் பெட்டிகளுடன்Continue Reading

  • விளையாட்டு,  

மே.22 கோவையில் இந்திய சிலம்பம் சங்கம் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் 1000க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் பங்கேற்றனர். கோவையில் இந்திய சிலம்பம் சங்கம் சார்பாக தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டியில் ஆந்திரா, தெலங்கானா, உ.பி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் குத்து வரிசை,Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

மே.22 கோவை மத்திய சிறையில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. கோவை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மற்றும் தடுப்பு காவல் என சுமார் 2,300க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தும் பொருட்டு கல்வி, யோகா, தியானம், தொழிற்பயிற்சி போன்ற பல்வேறு வகையான மறுவாழ்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் நடைபெற்ற அரசுContinue Reading

  • இந்தியா,  

மே.22 கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அம்மாநில சட்டப்பேரவை இன்று கூடுகிறது. வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதை தொடர்ந்து முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுடன் 8 அமைச்சர்களும் முதல் கட்டமாகப் பதவியேற்றுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து, நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கர்நாடக சட்டப்பேரவையின் சிறப்புContinue Reading

  • வானிலை செய்தி,  

மே.22 வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானதுContinue Reading

  • வணிகம்,  

மே.22 தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக நாளை சிங்கப்பூர் செல்கிறார். தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது, மாநிலத்தின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், தொழில்துறையை முன்னெடுத்து செல்வதில் அதிக கவனம் செலுத்திவருகிறார். அதன்படி, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்த இலக்குContinue Reading

  • தமிழ்நாடு,  

மே.22 தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி ஜூன் 20ஆம் தேதி திருவாரூர் அருகே காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக்க கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு. ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் வரும் ஜூன்Continue Reading