• இந்தியா,  

May 12.2023 கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமைவது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், ஜேடிஎஸ் கட்சியின் ஆதரவை பெற பாஜகவும், காங்கிரஸும் போட்டிப் போட்டு வருகின்றன. கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாவதை முன்னிட்டு, மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் (ஜேடிஎஸ்) ஆதரவை பெற பாஜகவும், காங்கிரஸும் குமாரசாமியின் வீட்டின் முன்பு முண்டியடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலில், யாருக்கு ஆதரவு என்பதை நாளை அறிவிப்போம் என குமாரசாமி தரப்பு தெரிவித்துள்ளது.Continue Reading

  • வானிலை செய்தி,  

மே.12 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள மோக்கா புயலானது தீவிர புயலாக உருமாறியுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது மோக்கா புயலாக மாறி நிலைகொண்டிருந்தது. இந்தப் புயலானது நேற்று மாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுவடைந்தது. இந்த மோக்கா புயல், போர்ட் பிளேருக்கு மேற்கே 510 கிலோமீட்டர் மற்றும்Continue Reading

கோவை வேளாண் பல்கலைக்கு அங்கீகாரம்
  • விவசாயம்,  

மே.12 கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ட்ரோன் மூலம் காற்றின்‌ தன்மை குறித்து அளவீடு செய்யும்‌ அமைப்பிற்கான காப்புரிமையை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்திறகு ஆளில்லா விமானம்‌ மூலம்‌ மருந்து தெளிக்கும் முறையில் காற்றின்‌ தன்மை குறித்து அளவீடு செய்யும்‌ அமைப்பிற்கான காப்புரிமை மத்திய காப்புரிமை ஒன்றியத்தால்‌ வழங்கப்பட்‌டுள்ளது. ஆளில்லா விமானம்‌ மூலம்‌ பயிர்களை தாக்கும்‌ நோய்‌, களை மற்றும்‌ பூச்சிகளை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும்‌ முறை தற்சமயம்‌Continue Reading

  • சுற்றுலா,  

மே.12 ஊட்டியில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் படகுப் போட்டி நடத்தப்பட்டது. இதில், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான கோடை விழா கடந்த 6ம் தேதி தொடங்கியது. அதன் தொடக்கமாக, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற்றது. சுற்றுலாப்பயணிகளை உற்சாகப்படுத்த சுற்றுலாத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் உள்ளிட்டவையும் நாள்தோறும்Continue Reading

  • தமிழ்நாடு,  

மே.12 கோவையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரின் உடல் உறுப்புகளை 7 பேருக்கு பயன்படும் வகையில், அவரது பெற்றோர் தானமாக வழங்கினர். விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது25). இவர் கோவையில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 29ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவினாசி சாலை, தொட்டிபாளையம் பிரிவு அருகே அவருக்கு விபத்து ஏற்பட்டது. இதில் பலத்தContinue Reading

  • இந்தியா,  

மே.12 தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு நிதியுதவி அளிப்பதாக வந்த புகாரின் பேரில், காஷ்மீர் மாநிலத்தில் 11 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் குழு அதிரடி சோதனை நடத்தியது. காஷ்மீரை சேர்ந்த ஜமாத் இ இஸ்லாமி பயங்கரவாத இயக்கத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் (உபா) மத்திய அரசு விதித்துள்ள இந்த தடை 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இதற்கிடையே, தடைContinue Reading

  • உலகம்,  

மே.12 டிவிட்டர் நிறுவனத்திற்கான புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்துவிட்டதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். உலகின் முன்னணி சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனம் குறுஞ்செய்திகளை மக்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு, பின்னர், வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பி, பரிமாறி கொள்ளும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த டிவிட்டரின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்த ஜாக் டோர்சி கடந்த 2021-ம் ஆண்டுContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

மே.12 கோவை துடியலுர் பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு, உறவினர்கள் வீடு, ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மார்ட்டின் குழும நிறுவன அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் சோதனை செய்தனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்த வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்த வழக்கில் பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு மற்றும்Continue Reading

  • விளையாட்டு,  

மே.12 கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்த 11 வயது சிறுவன் ராஜ முனீஸ்வர், 2 மணி நேரம் தொடர்ச்சியாக நீச்சல் குளத்தில் ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பங்களை சுழற்றி சாதனை புரிந்துள்ளார். நோபல் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சந்தான ராஜா- ராஜேஸ்வரி தம்பதி. இவர்களது 11 வயது மகன் ராஜமுனீஸ்வர். தனியார் பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு படித்துவருகிறார்.Continue Reading

  • தமிழ்நாடு,  

கலைஞர் போட்ட விதை இப்போது ஆலமரமாகிவிட்டது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்! ஹூண்டாய் மோட்டார் (Hyundai Motor) நிறுவனம் தமிழ்நாட்டில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, “1996-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஹூண்டாய் நிறுவனத்தினுடைய முதல் அலகிற்கு அடிக்கல் நாட்டினார்கள். 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் இரண்டாவது தொழிற்சாலையையும்,Continue Reading