• தமிழ்நாடு,  

பிளஸ் 2 தேர்வு முடிவில் கடைசி 15 இடங்களில் 13 வட மாவட்டங்கள் இருக்கும் நிலையில், கல்வி மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு 94.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வென்ற மாணவ, மாணவியருக்கும், 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவிContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

“அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் போலி வீடியோக்களை பதிவிட்டு அமைதியை சீர்குலைப்பதா?” – யூடியூபர் மணிஷ் காஷ்யப்பிற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் எதை வேண்டுமானாலும் பரப்புவதா என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், வட மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோக்கள் வெளியிட்ட விவகாரத்தில், தேசியContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

பிளஸ் 2 தேர்வில் தமிழ், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என 600 க்கு 600 மதிப்பெண் பெற்று திண்டுக்கல் மாணவி சாதனை படைத்துள்ளார். பிளஸ் 2 தேர்வு முடிவுகளை இன்று தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்நிலையில் திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம் கணினி, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் உள்ளிட்டContinue Reading

  • தமிழ்நாடு,  

மே.8 நெல்லை கூடங்குளத்தில் பராமப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக 2வது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நாளொன்றுக்கு 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த 2 அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில்,Continue Reading

  • தமிழ்நாடு,  

மே.8 சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி வெளியிட்டார். தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவ-மாணவியரில் 94.03 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6Continue Reading

  • இந்தியா,  

மே.8 டெல்லி ஜந்தர்மந்தரில் மல்யுத்த வீரர்கள் மேற்கொண்டுவரும் 2ம் கட்டப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில், விவசாயிகள் ஏராளமானோர் டெல்லிக்கு படையெடுத்த நிலையில், அவர்களை எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்பை பலப்படுத்திவருகின்றனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான மல்யுத்த வீரர்களின் பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் 2 ஆம்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

மே.8 நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு தோல்வி பயத்தால் புதுச்சேரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் என்னும் உயிர்க்கொல்லி தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுவையில் நீட் தேர்வுக்குContinue Reading

  • தமிழ்நாடு,  

மே.8 ஆளுநர் பாராட்டிவிட்டார் என்பதற்காக கொள்கைகளை விட்டு தர மாட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் த.மோ.அன்பரசன் செங்கோல் வழங்கினார். பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாகContinue Reading

  • வானிலை செய்தி,  

மே.8 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாளை (மே.9) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றுContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

மே.8 தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மே 10ம் தேதி முதல் 15 நாட்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நடப்பாண்டில் மே மாதம் 10 ந்தேதி முதல் 24 ந்தேதி வரை 15 நாட்களுக்கு அங்கன்வாடி பணியாளர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் நெறிமுறைகளின்படி,Continue Reading