• இந்தியா,  

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை திரும்பப் பெற்றார் சரத் பவார். கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக சரத் பவர் அண்மையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், சரத் பவார் தன்னுடைய முடிவை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்திவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.Continue Reading

  • இந்தியா,  

கர்நாடகா மாநிலத் தேர்தலில் பலரது கவனத்தையும் ஈர்க்கும் சொரபா சட்டமன்ற தொகுதியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் பங்காரப்பாவின் மகன்களான குமார்பங்காரப்பா பாஜகவிலும் மது பங்காரப்பா காங்கிரஸிலும் வேட்பாளராக களம் இறங்கி உள்ளனர். கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற 10ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

மே.5 கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள்கள் துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக தலைமைச்செயலாளருக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் எதையும் செய்யவில்லை என்றும், தமிழ்நாடு அரசு அவர்கள் மீது பழிவாங்கும் விதமாக நடவடிக்கை எடுக்கிறது என்றும் பேட்டி ஒன்றில் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இந்த வழக்கில் 6,7ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இருவிரல் கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாகவும்Continue Reading

  • தமிழ்நாடு,  

மே.5 தமிழகத்தில் அண்ணாபல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்காக இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணாபல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைகழகத்தின் கீழ்Continue Reading

  • இந்தியா,  

பீகார் அரசின் சாதிவாரி கணக்கெடுப்பை தற்காலிகமாக நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு. பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்துவரும் நிலையில், இறுதி தீர்ப்பு வரும் வரை நிறுத்துவைக்க பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளாக சாதிய இழிவுகளால் அடிமைபடுத்தப்பட்டு, அடைப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தர்களுக்கு இந்தியாவில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இடஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது. எனவே சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என நாடு முழுவது இருந்தும்Continue Reading

  • இந்தியா,  

கட்சி சிதைவதை பார்ப்பதற்கு பதிலாக கண்ணியமாக தலைவர் பதவியை ராஜினாமா செய்ய சரத் பவார் நினைத்திருக்கலாம் என்று சிவ சேனாவின் (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) ஊதுகுழலான சாம்னா பத்திரிகையின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை சரத் பவார் ராஜினாமா செய்தது தொடர்பாக, சிவ சேனாவின் (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) ஊதுகுழலான சாம்னா பத்திரிகையின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் ராஜினாமா அத்தியாயம்Continue Reading

  • இந்தியா,  

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் அவரது கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் மாநிலத்தில் செயல்படும் மது மாபியாவிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி வாங்கியுள்ளதாக அம்மாநில பா.ஜ.க. தலைவர் சாம்ராட் சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார். பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில் 2016ம் ஆண்டு முதல் மதுவிலக்குContinue Reading

  • இந்தியா,  

மணிப்பூரில் நிலவும் அமைதியற்ற சூழலுக்கு பா.ஜ.க.வின் வெறுப்பு, பிரிவினை மற்றும் அதிகார பேராசை அரசியலே இந்த குழப்பத்திற்கு காரணம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டினார். மணிப்பூரில் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மெய்டீஸ் சமூகத்தினருக்கு பழங்குடியினர் சமூகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமூகத்தினர்Continue Reading

  • வணிகம்,  

மே.5 ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வருகிற 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்து இருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட கேரள முதலமைச்சர், அபுதாபி செல்வதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தார். இது தொடர்பான மனுவை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆய்வு செய்தார். பின்னர், முதலமைச்சர்Continue Reading

  • தமிழ்நாடு,  

மே.5 மதுரையில் சித்திரைத் திருவிழாவையொட்டி, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பச்சை பட்டுடுத்தி அழகர் ஆற்றில் இறங்கிய நிகழ்ச்சியைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா கடந்த 23-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்துContinue Reading