தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் தகவல்
  • வானிலை செய்தி,  

மே.3 தமிழகத்தில் வரும் 7 அல்லது 8ம் தேதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றில் ஈரப்பதத்தின் அளவு கூடியுள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறினார்.சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அவர்Continue Reading

  • இந்தியா,  

மே.3 இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 39 சதவீதம் பேர் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக நொய்டாவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க அதன் மூலம் நடைபெறும் மோசடிகளும் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில், ஆன்லைன் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து நொய்டாவைச் சேர்ந்த ‘லோக்கல் சர்க்கிள்ஸ் ‘ என்ற பிரபல நிறுவனம்Continue Reading

  • தமிழ்நாடு,  

மே.3 சென்னையில் கடந்த 27ம் தேதி பாஜக பட்டியலின மாநிலப் பொறுப்பாளர் சங்கர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி பாஜக பட்டியலின மாநில பொருளாளர் சங்கர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 9 பேர் இதுவரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இந்நிலையில், சங்கர் கொலை செய்யப்பட்டதை கண்டித்துContinue Reading

வால்பாறையில் வாகனத்தை தாக்கிய காட்டுயானை
  • தலைப்புச் செய்திகள்,  

மே.3 கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப்பகுதிக்குள் சென்ற சுற்றுலா பயணிகளின் வாகனத்தை, அங்கு குட்டியுடன் வந்த காட்டு யானை ஒன்று திடீரென தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வால்பாறை பகுதிக்கு கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. வால்பாறை பகுதியை சுற்றி பார்க்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியிலிருந்துContinue Reading

  • இந்தியா,  

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த அரசியல் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான சரத் பவார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இன்று காலை அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் மட்டுமின்றி தேசிய அரசியலில் நன்கு அறியப்பட்ட முகமாக பார்க்கப்படுவர் சரத் பவார். இவரது விலகல் பேசுபொருளாக மாறியுள்ளது. சமீப காலமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியைContinue Reading

  • இந்தியா,  

ரூ.1000-க்கு மேல் மின் கட்டணம் வந்தால் ஆன்லைனில்தான் கட்ட முடியும் என்கிற புது ரூல்ஸ் வரவுள்ளது. மின்சாரக் கட்டணம் 1000 ரூபாய்க்கு மேல் வந்தால் இனி ஆன்லைனில் மட்டுமே பணம் கட்ட முடியும் என்கிற புதிய விதி விரைவில் அமலுக்கு வரும் என தமிழ்நாடு மின்சார வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகவே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. முதலில் இது பெரிய அளவில் மக்களைContinue Reading

  • இந்தியா,  

திருமலை திருப்பதிக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியதாக மர்ம இமெயில் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருமலை திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மர்ம இமெயில் ஒன்று வந்த நிலையில், திருப்பதி கோயில் மற்றும் மலைப்பகுதி முழுவதையும் ஆந்திரா போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்புதான், திருப்பதி கோயிலுக்கு மேலே ஆளில்லா விமானம் பறந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.Continue Reading

  • இந்தியா,  

கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, அரசியல் கட்சிகள் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. அந்த வகையில் பாஜக நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசிய தலைவர்Continue Reading

  • இந்தியா,  

தூக்கு தண்டனைக்கு மாற்றாக வலியற்ற தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆய்வு குழுவை மத்திய அரசு அமைக்கவுள்ளதாக தகவல். இந்திய தண்டனை சட்டத்தின் உச்சமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. ”1973 ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 354(5) இன் கீழ் “இறக்கும் வரை கழுத்தில் தொங்குதல்” என்பது அதி தீவிர தண்டனையாகும். இந்தியாவில் கடைசியாக டெல்லி நிர்பயா கூட்டு பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு 2020Continue Reading

  • இந்தியா,  

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பயணித்த ஹெலிகாப்டரில் கழுகு மோதி சேதம் ஏற்படுத்தியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார் கோலார் பகுதியில் நடக்கவிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஜக்கூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார். ஹெலிகாப்டர் உயரே பறந்து கொண்டிருந்தபோது கழுகுContinue Reading