• தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிப்பது குறித்து தேர்தல் ஆணையம் புதன் கிழமை நடத்த உள்ள ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களால் தாம் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்க செய்த மனுவை விசாரித்த டெல்லி உயாநீதிமன்றம் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு உத்தரவிட்டு இருந்தது. இந்த கெடு முடிவதற்கான அவகாசம்Continue Reading

  • உலகம்,  

ஏப்ரல் 18 சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே நடந்து வரும் மோதலில் இதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஆர்.எஸ்.எப். துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக  துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தாக்லோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில்,Continue Reading

  • இந்தியா,  

ஏப்ரல் 18 தேஜஸ்வி யாதவ் அதிக் அகமதுவை அதிக் ஜி என்று குறிப்பிட்டது முஸ்லிம் திருப்திப்படுத்தும் அரசியல் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. உத்தர பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமையன்று பிரபல தாதாவான அதிக் அகமதுவையும், அவரது சகோதரர் அஷ்ரப் அகமதையும் போலீசார் பிரயாக்ராஜில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அப்போது அங்கு செய்தியாளர்களிடம் அதிக் அகமது பேசிக் கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர்களை போலக் காட்டி கொண்ட சிலர் அவர்களின்Continue Reading

  • இந்தியா,  

ஏப்ரல் 18 நாட்டின் அரசியலில் குதிரை பேரம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்க்கும் ஒரு புதிய மாதிரியை மோடியும் அமித் ஷாவும் உருவாக்கியுள்ளனர் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அசொக் கெலாட் பேசுகையில் கூறியதாவது: பிரதமர் மோடி சமீபத்தில்Continue Reading

  • இந்தியா,  

ஏப்ரல் 18 `அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராக இருக்கிறார், அவர் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பவராக இருக்க வேண்டும்.” – மம்தா மேற்கு வங்க மாநிலம், பீர்பூம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க 35 இடங்களில் வெற்றிபெற்றால், 2025-ம் ஆண்டுக்குப் பிறகு மம்தா பானர்ஜியின் ஆட்சி நீடிக்காது” எனப் பேசினார். 2021-ம் ஆண்டுContinue Reading

  • இந்தியா,  

ஏப்ரல் 18 “பகவந்த் மான் ஒரு பெரிய மாநிலத்தின் முதல்வர். அவர் காலிஸ்தானுக்கு எதிராக நல்ல நடவடிக்கை எடுத்திருக்கிறார்.” – ஹிமந்தா பிஸ்வா சர்மா காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் சிங் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார். அவரை கைதுசெய்ய பஞ்சாப் அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கிடையே காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் பஞ்சாபிலிருந்து தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரைக் கைதுசெய்ய பஞ்சாப் காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. இந்தContinue Reading

  • இந்தியா,  

ஏப்ரல் 18 இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 8000க்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலையில், தற்போது குறைய தொடங்கியுள்ளது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது.Continue Reading

  • இந்தியா,  

ஏப்ரல் 18 “ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண வயதில் வேறுபாட்டைக் கடைப்பிடிப்பது ஆணாதிக்கக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டது, இப்படியான வயது வேறுபாட்டிற்கு பின் அறிவியல்பூர்வ காரணிகள் ஏதுமில்லை, இது பெண்களுக்கு எதிரான சமத்துவமின்மையைக் காட்டுகிறது.’’ ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே சீரான திருமண வயதினை கொண்டு வர வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது. இந்த வழக்கிற்கு முன்பாக, அஷ்வினி உபாத்யாய் என்பவர் தொடுத்தContinue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல் – 18. திருச்சியில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு காவல்துறை ஒத்துழைப்பு வழங்கக்கோரி அவருடைய ஆதரவாளர்கள் சென்னையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் மனு கொடுத்தனர். இந்த மாநாடு 24- ம் தேதி நடைபெறவிருக்கிறது . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கம், மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருவார்கள் என்றார்.திருச்சி மாநாட்டிற்குப் பிறகு எடப்பாடி தரப்பினர் தங்களைக் கண்டு சிதறி சின்னாபின்னம் ஆகி விடுவார்கள்Continue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல் 18 -சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டு, போக்குவரத்தை முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம் என்று மீனவர்களை அறிவுறுத்தி உள்ளது. சென்னையில் கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து மீனவர்கள் மீன் கடைகள் அமைத்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்துContinue Reading