• தமிழ்நாடு,  

சென்னையில் குட்கா விற்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக வியாபாரியிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் , சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் மீது கூடுதல்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் மேலும் கால அவகாசம்  வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபடுவதாகவும், இதனால் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் படி கடந்தContinue Reading

முதுமலையில் வாகனங்களைத் துரத்திய காட்டுயானை
  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.18 நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி – தெப்பக்காடு நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாகத் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கோடை காரணமாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயர தொடங்கி உள்ளன. அந்த வகையில், முதுமலைக்குள் உள்ள பிரதான சாலைகளில் யானைகள் நடமாட்டம்Continue Reading

தாராபுரத்தில் கஞ்சாவுடன் பிடிபட்ட இளைஞர்
  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.18 திருப்பூர் அருகே தாராபுரத்தில் மதுவிலக்கு போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது, காரில் கடத்திவரப்பட்ட 5.50 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாழப்பாடியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மதுவிலக்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக டாடா இண்டிகா என்ற வாகனத்தில் வந்த நபரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.Continue Reading

  • தமிழ்நாடு,  

சீர்காழி சட்டநாதர் கோவிலில் கிடைத்து உள்ள 22 ஐம்பொன் சிலைகளும் ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்தியாவில் இது வரை கிடைக்கப் பெறாத உலோகத்தால் இந்த சிலைகள் செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்து உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள பழமை வாய்ந்த சட்டநாதர் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதம் 24-ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை அமைப்பதற்கு மண்Continue Reading

தர்பூசணி சாகுபடி - விவசாயிகள் கவலை
  • விவசாயம்,  

ஏப்ரல்.18 திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி, கோடையில் வெயிலால் விளைச்சல் குறைந்துவிட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் அதன் சுற்றுப்பகுதியிகளில் கோடை சீசனை கணக்கில்கொண்டு விவசாயிகள் ஆண்டுதோறும் தர்பூசணி சாகுபடி செய்துவருகின்றனர். கிணற்றுபாசனத்தை வைத்து விவசாயிகள் தர்பூசணியை பரவலாக சாகுபடி செய்கின்றனர். தண்ணீர் வீணாவதைத்தடுக்கும் வகையில், தர்பூசணிக்காக பார் எனப்படும் மேட்டுப்பாத்தி அமைத்து, நீர் ஆவியாகாமல் தடுக்க நிலப்போர்வை போர்த்திContinue Reading

மாமல்லபுரத்தில் இன்று கட்டணம் இல்லை
  • சுற்றுலா,  

ஏப்ரல்.18 உலக பாரம்பரிய தினத்தையொட்டி, இன்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி கண்டு ரசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறை சார்பில் நாடு முழுவதும் புராதன சின்னங்கள் உள்ள இடங்களில் இன்று உலக பாரம்பரிய தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்சுணன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதனContinue Reading

மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் அமல்
  • சுற்றுலா,  

ஏப்ரல்.18 கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவித்துள்ளார். கோடை விடுமுறை வருவதால் வரும் நாட்களில் ஊட்டி, மேட்டுப்பாளையம் மற்றும் பிற மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு, அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் மாவட்டContinue Reading

துப்புரவு பணியாளராக மாறிய பெண்கவுன்சிலர்
  • சுற்றுச்சூழல்,  

ஏப்ரல்.18 கோவை மாநகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் தூய்மை பணி மேற்கொள்ளப்படாததால், அதிருப்தியடைந்த பெண் கவுன்சிலர் ஷர்மிளா சந்திரசேகர், தானே களத்தில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சி பகுதியான வடவள்ளி பகுதியில் உள்ள பூங்கா மற்றும் தெருக்களில் சரிவர தூய்மை பணி மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் 38வது வார்டு அதிமுக கவுன்சிலரான ஷர்மிளா சந்திரசேகரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநகராட்சிContinue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல்-18. கோயம்புத்தூில் குடும்பப் பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்திய சாமியார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்ககப்படுகிறது. கோவை மாநகர போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் அதே ஊரைச் சேர்ந்த 36 வயதுப் பெண் ஒருவர் கொடுத்துள்ள புகார் சாமியாருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட அந்தப் பெண் கணவர் கார்த்திக் உடன் ஐதராபாத் நகரத்தில் வசித்து வந்து உள்ளார்.அவர்களுக்கு ஆறுContinue Reading

துபாய் தீவிபத்து - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.18 துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். துபாய் நாட்டின் தேராவின் அல் ராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் கடந்த சனிக்கிழமையன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 16 பேர் உயிரழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். கட்டிடத்தின் 4-வது மாடியில் ஏற்பட்ட தீ,Continue Reading