• உலகம்,  

தனது நட்பு நாடுகளையும் அமெரிக்கா உளவு பார்த்து வருவது, பென்டகனிலிருந்து அண்மையில் கசிந்த ரகசிய ஆவணங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. உலகில் சக்திவாய்ந்த ராணுவக் கட்டமைப்புகளை வைத்திருக்கும் நாடுகளில், அமெரிக்காவுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகம் பென்டகன் ஆகும். இது வெர்ஜீனியாவின் ஆர்லிங்டனில் இருக்கிறது. இது பரப்பளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கட்டடங்களில் ஒன்றாகும். இங்கு ராணுவ உபகரணங்கள் மட்டுமல்லாமல், அந்த நாட்டின் ராணுவ ரகசியங்கள், எதிரிContinue Reading

  • இந்தியா,  

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டும் அடிக்கடி பொதுவெளியில் தெரியுமளவுக்கு மோதி வருகின்றனர். அண்மையில் கூட, ராஜஸ்தானில் கடந்த பா.ஜ.க ஆட்சியின்போது நிகழ்ந்த ஊழல்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை, முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்த ஆண்டு இறுதியில் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சொந்தக் கட்சிக்குள்ளேயே இவ்வாறு மோதல் அரங்கேறுவதுContinue Reading

  • இந்தியா,  

இந்திய அரசியல் சட்டச் சிற்பியான டாக்டர் அம்பேத்கர், 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள மோவ் எனும் நகரில் பிறந்தார். நாட்டின் மிகப் பெரும் சமூக சீர்திருத்தவாதியாக கொண்டாடப்படும் இவர், மிகச் சிறந்த கல்வியாளராகவும், பொருளாதார நிபுணராகவும், அரசியல்வாதியாகவும், சட்ட நிபுணராகவும் விளங்கியவர். இந்த நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளான வரும் ஏப்ரல் 14ம் தேதியை பொது விடுமுறை தினமாக மத்திய அரசுContinue Reading

  • இந்தியா,  

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 32 பேரும், பட்டியல் இனத்தவரில் 20 பேரும், பட்டியல் பழங்குடியினரில் 16 பேரும் பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கர்நாடகாவில் உள்ள 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வரும் மே 10ம் தேதி நடைபெறகிறது. அதன்படி, வேட்புமனுத் தாக்கல் நாளை முதல் 20ம் தேதி வரை நடைபெறும். ஏப்ரல் 21ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், வேட்பு மனுக்களைContinue Reading

  • இந்தியா,  

அஜ்மீர்-டெல்லி இடையே நாட்டின் 15வது வந்தே பாரத் ரயிலைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்து பேசிய, பிரதமர் மோடி, இந்த வந்தே பாரத் ரயிலின் மூலம் சுற்றுலா மேம்படும் என்றும், இரு நகரங்களின் இணைப்பு எளிதாக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ரயில் ராஜஸ்தானின் முதல் வந்தே பாரத் ரயிலாகும். இந்த ரயில் மூலம் அஜ்மீர்-டெல்லி இடையேயான பயணம்Continue Reading

  • தமிழ்நாடு,  

சென்னை ராயபுரத்தில் நீர்மோர் பந்தலைத் திறந்துவைத்த முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார், “தி.மு.க ஆட்சியில் கருத்துரிமை முழுக்கப் பறிக்கப்பட்டிருக்கிறது. பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவது லைவில் வருவதில்லை. ஏனென்றால், அங்கு சட்டமன்றம் நடக்கவில்லை. ஸ்டாலின் தர்பார்தான் நடந்துகொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்குக்கூட பக்குவமின்றி கேலியும், கிண்டலுமாகத்தான் பதிலளிக்கிறார்கள்” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.Continue Reading

  • தமிழ்நாடு,  

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் தனியார் பள்ளியொன்றில் 5 வயது சிறுமி ஒருவர், அந்தப் பள்ளியின் தாளாளரும், தி.மு.க நகர்மன்ற உறுப்பினருமான பக்கிரிசாமி என்பவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. முன்னதாக, பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று வயிற்றுவலி எனப் பெற்றோர்களிடம் கூறியதையடுத்து, சிறுமியைப் பெற்றோர் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றிருக்கின்றனர். அப்போது, சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். இந்தContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்தன. பொள்ளாச்சி அருகே உள்ள ராசக்காபாளையத்தில் மோகன ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. இந்த தொழிற்சாலையில் தென்னை நார் உற்பத்தி செய்யப்பட்டு உரிய விலை கிடைக்காததால் டன் கணக்கில் தேக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று உற்பத்திContinue Reading

  • தமிழ்நாடு,  

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாநிலத்திலேயே இல்லாத வகையில் அதிக சொத்துவரியை உயர்த்தியுள்ள நகராட்சியைக் கண்டித்து பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியினர் பெண்கள் உட்பட சுமார் 200.க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் வியாபாரிகள் நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் எனContinue Reading

  • சுற்றுச்சூழல்,  

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அதிரப்பள்ளி வன பகுதிக்குள் சுற்றத்திரிந்த தும்பிக்கை இல்லாத யானைக்குட்டி, நீண்ட நாட்களுக்குப் பிறகு யானைக் கூட்டத்துடன் சேர்ந்தது. இது தொடர்பாக கேரள வனத்துறை வெளியிட்டுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகிறது. திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு தும்பிக்கை இல்லாமல் குட்டியானை ஒன்று சுற்றுலா பயணிகளால் புகைப்படம் எடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், குட்டி யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.Continue Reading