• தமிழ்நாடு,  

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் பாகுபாலி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த கிராமம் மேட்டுப்பாளையம்-வனப்பத்திரகாளியம்மன் கோயில் செல்லும் சாலையில் உள்ளது. இந்நிலையில், அருகிலுள்ள நெல்லிமலை வனப்பகுதியிலிருந்து தினமும் உணவு, குடிநீர் தேடி காட்டு யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்டContinue Reading

  • இந்தியா,  

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோன பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 6 ஆயிரத்தை தாண்டி தினசரி பாதிப்பு பதிவாகி வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் 6,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சனிக்கிழமை 6,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் நேற்றுContinue Reading

  • Uncategorized,  

கர்நாடக மாநிலத்தில் கர்நாடக பால் கூட்டமைப்பு, அம்மாநில விவசாயிகளிடம் இருந்து பாலை மொத்தமாக வாங்கி நந்தினி என்ற பிராண்ட் பெயரில் பால் மற்றும் பாலில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், அண்மையில் குஜராத்தில் உள்ள அமுல் நிறுவனம் கர்நாடக சந்தையிலும் களம் இறங்க உள்ளதாக அறிவித்தது. தலைநகர் பெங்களூருவில் அமுல் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்கும் என்று அமுல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து அமுல்Continue Reading

  • இந்தியா,  

விரும்பத்தகாத தொழிலதிபர்களை சந்திக்க ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு செல்வார் என்பதற்கு 10 உதாரணங்களை என்னால் கொடுக்க முடியும் என்று முன்னாள் காங்கிரஸ்காரர் குலாம் நபி ஆசாத் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கடந்த தினங்களுக்கு முன் டிவிட்டரில், அதானி பெயருடன், காங்கிரஸில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரெட்டி, ஹிமாந்தா பிஸ்வா சர்மா மற்றும் அனில்Continue Reading

  • இந்தியா,  

ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பா.ஜ.க. அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது கெலாட் அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி சச்சின் பைலட் இன்று ஒரு நாள் உண்ணாவிரப் போராட்டம் நடத்த உள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சச்சின் பைலட்டுக்கும் இடையே நீ்ண்ட நாட்களாக பனிப்போர் நிலவிContinue Reading

  • இந்தியா,  

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மீது தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளது. அனுமதி வழங்கப்பட்டபோதும் ஆலையில் தேங்கியுள்ள ஜிப்சம் கழிவுகளை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நீக்கவில்லை என தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தேங்கியுள்ள கழிவுகளை நீக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆலையில்Continue Reading

  • இந்தியா,  

தற்போது இந்தியாவில், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, மா.கம்யூ., பகுஜன் சமாஜ் கட்சி (B.S.P), தேசிய மக்கள் கட்சி (N.P.P) ஆகிய ஆறு கட்சிகள் மட்டுமே தேசியக்கட்சிகளாக இருக்கின்றன. இந்தியாவில், 2012, அக்டோபர் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் மெல்ல மெல்ல வளர்ந்து, இன்று பஞ்சாப்பிலும் டெல்லியிலும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறது. கட்சிகளுக்கான சட்டத்தின்படி, ஒரு கட்சி, நான்கு மாநிலங்களில், 6Continue Reading

  • Uncategorized,  

”அண்டை மாநிலத்திலிருந்து விதவிதமாகப் போதைப்பொருள்கள் விற்பனை செய்யக்கூடிய கேந்திரமாக புதுச்சேரி மாறியிருக்கிறது”- புதுச்சேரி அ.தி.மு.க புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரி மாநிலம் முழுக்க முழுக்க இரவு நேர மதுபான பார்கள், ரெஸ்டோ பார்கள், கடைகள் திறந்திருப்பதால் சட்டம் – ஒழுங்கு முழுமையாகச் சீர்கெட்டுக் கிடக்கிறது. மதுபான பார்களும், ரெஸ்டோ பார்களும் இரவுContinue Reading

  • இந்தியா,  தமிழ்நாடு,  

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கியதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் முடிவில் இன்று உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதிசெய்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.Continue Reading

  • தமிழ்நாடு,  

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வழி செய்யும் மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று ஒப்புதல் அளித்தார். தடையை மீறி இந்த விளையாட்டை விளையாடுவோருக்கான தண்டனை விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டுவரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை பேரவையில் அமைச்சர் ரகுபதி 2022 அக்டோபர் மாதம் 19-ந் தேதி தாக்கல் செய்தார். அது பேரவையில் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆளுநர்Continue Reading