• தலைப்புச் செய்திகள்,  

தென்காசியிலிருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக கனிமளவங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், புளியரை சோதனை சாவடியில் சிறப்பு தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கேரளாவிற்கு சட்ட விரோதமாக கொண்டு செல்லப்படுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இருப்பினும், விதிகளை மீறி சட்டவிரோதமாக, ஏராளமான லாரிகளில் தென்காசி மாவட்டத்திலிருந்துContinue Reading

  • தமிழ்நாடு,  

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள மூணார் சாலையில் உலா வந்த காட்டுயானை, சாலையில் சென்ற வாகனங்களைத் தாக்கியதில் 3 வாகனங்கள் சேதமடைந்தன. திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணார் சாலையில் நடுரோட்டில் நின்ற காட்டு யானை (கொம்பன்) முன்பக்கத்தில் கொம்பினால் குத்தியதில் மூன்று வாகனங்கள் சேதமடைந்தன. மறையூரில் இருந்து கட்டுமானப் பொருட்களை கொண்டு வருவதற்காக உடுமலைப்பேட்டைக்கு சென்ற அமீன் என்பவர், டிப்பர்லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது, உடுமலைப்பேட்டை சின்னார் வனப்பகுதியில் நடுரோட்டில்Continue Reading

  • விளையாட்டு,  

இலங்கை, நியூசிலாந்து அணிகள் இடையாயன 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 3வது மற்றும் கடைசிப் போட்டி வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதையடுத்து 2Continue Reading

  • இந்தியா,  

இந்தியாவில் இனி சிறு சேமிப்பு திட்ட கணக்குகளுக்கும் ஆதார் மற்றும் பான் எண்களை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் என்பது ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில், இந்த ஆதார் எண்ணைப் பிற அடையாள அட்டைகளுடன் இணைப்பதற்கு மத்திய அரசு வழிவகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிறு சேமிப்பு திட்டக் கணக்குகளுக்கு ஆதார் எண் மற்றும்Continue Reading

  • இந்தியா,  

வருமான வரிச் சட்டத்தில் ரெய்டு என்பது இல்லையென்றும், வரி ஏய்ப்பு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களின் இடங்களில் சோதனை மேற்கொள்ள வருமான வரிச்சட்டத்தில் அதிகாரம் உள்ளது என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வருமான வரித் துறை நடத்திய ரெய்டுகளின் விவரங்கள் அப்போது கைப்பற்றபட்ட ரொக்கம் போன்ற தகவல்களைக் கேட்டு விரிவான கேள்வியை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு மக்களவையில் எழுப்பி இருந்தார்.Continue Reading

  • இந்தியா,  

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக வரும் 8ம் தேதி தமிழகம் வருகிறார். இதையொட்டி, வரும் சனிக்கிழமை சென்னை முழுவதும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை- கோவை இடையேயான அதிகவே வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இதற்காக நாளை மறுநாள் (ஏப்.8) பிரதமர் நரேந்திர மோடி தனிContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

பங்குனி உத்திரத்தையொட்டி, கோவையில் உள்ள புகழ்பெற்ற மருதமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர். தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் உள்ள பல கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. அந்த வகையில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, பால், பன்னீர், ஜவ்வாது போன்ற 16 வகைContinue Reading

  • சுற்றுலா,  

காசியில் நடைபெற்ற தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவையை சேர்ந்த துளசி அம்மாளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில், நாட்டின் பன்முகத்தை காக்க இத்தகைய ஒற்றுமை உணர்வு ஊக்குவிக்கிறது எனத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி காசியில் நடைபெற்றது. இதில் பங்கேற்க, தமிழகத்தின் 12 இடங்களிலிருந்து காசிக்கு சிறப்பு ரயில்கள் மூலம் சுமார் 2,500 பேர் ஆன்லைனில் பதிவு செய்துContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பிறந்தநாள் விழா சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கொண்டாடப்பட்டது. அதில், கோவையை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவரும் இளம் எழுத்தாளருமான ரித்விக் பாலா உள்ளிட்ட 11 பேருக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழக ஆளுநரின் பிறந்தநாள் விழாவையொட்டி, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இளம் சாதனையாளர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ‘அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ஸ்காட்டிஷ் பைரேட்ஸ் அண்ட் தி டெட்லி டிராகன்’ புத்தகத்தின்Continue Reading

  • தமிழ்நாடு,  

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 55வயது பெண் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்துவருகிறது. இதையடுத்து, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சுகாதாரத்துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, அரசு மருத்துவமனைகள், திரையரங்குகள், வணிக வளாகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும்Continue Reading