• இந்தியா,  

கடந்த 2019ஆம் ஆண்டு, தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ்மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, “எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?” என கூறியிருந்தார். ராகுல்காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவைContinue Reading

  • இந்தியா,  

2022-23 நிதியாண்டில் திருப்பதியில் ரூ.1,520 கோடி காணிக்கை பெறப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோயில் உலகின் பணக்கார கோயில்களின் ஒன்றாகும். திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்ய வருவார்கள். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள். இங்கு வரும் மக்கள் சுவாமியை தரிசனம் செய்த பின் உண்டியலில்,Continue Reading

  • இந்தியா,  

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டதிலிருந்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. வரும் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைப்போம் என்று ஆளுங்கட்சியான பா.ஜ.க கூறிவருகிறது. எதிர்க் கட்சியான காங்கிரஸோ, மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்று நம்பிக்கையுடன் கூறிவருகிறது. மூன்றாவது பெரிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம், கணிசமான தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்தContinue Reading

  • சுற்றுச்சூழல்,  விவசாயம்,  

தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் மனம் வைத்தால், 242 கோடி மரங்கள் நடுவது என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை என காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் கோயம்புத்தூர் கட்டுனர்கள் மற்றும் ஒப்பந்ததார்கள் சங்கம் (சிபாகா) சார்பில் ‘பசுமை தொண்டாமுத்துர்’ திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியின் நிறைவு விழா கோவையில் நடைபெற்றது. போத்தனூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவகத்தில் நடைபெற்றContinue Reading

  • இந்தியா,  

2024 நாடாளுமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் காங்கிரஸூக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கணித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் பேட்டி ஒன்றில் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் நான் இருந்திருந்தால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் சிறிய கட்சிகளை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்க ஊக்குவித்திருப்பேன். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கான புதிய காரணத்தை கண்டுபிடித்துContinue Reading

  • வானிலை செய்தி,  

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்இந்தியப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்குத் திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னடலுடன் கூடியContinue Reading

  • தமிழ்நாடு,  

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி, இறுதி விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்று ஜேசிடி.பிரபாகர் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்Continue Reading

  • தமிழ்நாடு,  

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நல்விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரமலான். இந்த ஆண்டுக்கான ரமலான் பண்டிகையை வரும் 21ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, கடந்த மாதம் 31ம் தேதி முதல் இஸ்லாமிய மக்கள் ரமலான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். ஏழை எளிய மக்களின் இன்பதுன்பங்களில் பங்கு பெற்று அவர்கள் பசியைContinue Reading

  • வணிகம்,  

கோவை விமான நிலையத்தில் விமானம் மூலம் சரக்குகளை அனுப்புவதற்கான கட்டணம் மற்ற விமான நிலையங்களைவிட அதிகமாக இருப்பதால் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு நாள்தோறும் விமான சேவை வழங்கப்பட்டுவருகிறது. தினமும் இரவு 7.45 மணியளவில் கோவையில் தரையிறங்கும் விமானம், மீண்டும் 8.45 மணியளவில் சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்கிறது. தினமும் பயணிகள் இருக்கைகள் முழுவதும் நிரம்பி இயக்கப்படும் இந்த விமானத்தில், சரக்குகள் மட்டும் மிக குறைந்த அளவேContinue Reading

  • சுற்றுலா,  

கோவை மாவட்டத்தில் உள்ள கோவைக் குற்றாலத்தில் கொளுத்தும் கோடையைச் சமாளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து, அருவியில் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர். கோவை உட்பட தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கோடைக்காலம் முன்கூட்டியே தொடங்கிவிட்டது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். பல மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டிக் கொளுத்தும் வெப்பத்தால் குழந்தைகள், முதியவர்கள் என பல தரப்பினரும் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். கோடையின் கொடுமையிலிருந்துContinue Reading