• தலைப்புச் செய்திகள்,  

கோவையில் உலக ஆட்டிசம் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் நடனமாடி பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர். கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு கல்லூரி அரங்கில் உலக ஆட்டிசம் தினத்தையொட்டி, ஆட்டிசம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கௌமார பிரசாந்தி சிறப்பு பள்ளி சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட ஆட்டிசம் குறைபாடுடைய சிறப்பு குழந்தைகள்Continue Reading

  • தமிழ்நாடு,  

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, திமுகவில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவின் முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக-வில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி,Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கேரளாவிலிருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். கேரளா மாநிலம் திருச்சூரிலிருந்து சுற்றுலா பேருந்தில் 51 பேர் வேளாங்கண்ணி குருத்தோலை விழாவில் பங்கேற்க சென்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடு கீழையூர் பகுதியில் சென்றபோது, சாலையின் வளைவில் உள்ள பக்கவாட்டு தடுப்பு சுவரில் மோதிய பேருந்து கவிழ்ந்துContinue Reading

  • வணிகம்,  

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மணப்பாறை முறுக்கு, ஊட்டி வரிக்கி, நெகமம் காட்டன் சேலை உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவி சார் குறியீடு கிடைத்துள்ளதாக அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புவிசார் குறியீடு சட்டம் 2003-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதுவரை, இந்தியாவில் 435 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில்Continue Reading

  • தமிழ்நாடு,  

திருவாரூரில் புகழ்பெற்ற தியாகராஜர் கோயில் ஆழித்தோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். சைவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவின் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப் புகழ்பெற்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் ஏப்.1ஆம் தேதி காலை 7:30 மணிக்கு தொடங்கியது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் திருவாரூர்Continue Reading

  • விளையாட்டு,  

தூத்துக்குடியில் டவுன்சின்ட்ரோம் குறைபாடுடைய 4 வயது சிறுவன், 50 வகையான விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவற்றின் படங்களை அடையாளம் காண்பித்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். தூத்துக்குடிமுத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த அருண் நிர்மலா தம்பதியினரின் 4 வயது சிறுவன் செல்வ சந்தோஷ். இவர் அதேபகுதியில் உள்ள சாண்டி மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். செல்வசந்தோஷ் பிறந்தபோதே டவுன் சின்ட்ரோம் என்ற மூளை குறைபாடு நோயால் 50 சதவீதம் பாதிக்கப்பட்டிந்தார். இதையடுத்து,Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்றுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சியில் சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை, கழிவுநீர் கால்வாய், பூங்கா அமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுவருவதாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவிவந்தது. இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி கூட்டContinue Reading

  • தமிழ்நாடு,  

அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று ஆஜராக ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்கிற்கு மாநில மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக வந்த புகாரின்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பின் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதுதொடர்பாக சேரன்மாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டContinue Reading

  • இந்தியா,  

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 1000-க்கும் கீழ் இருந்த தினசரி தொற்று பாதிப்பு தற்போது 3000 கடந்து பதிவாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி 3,095 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கேரளாவில்தான் அதிக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 4375 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 3090 பேருக்கு தொற்று பாதிப்புContinue Reading

  • சுற்றுலா,  

நீலகிரியில் இன்று 136-ஆவது ஆண்டு குதிரை பந்தயம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனை பெண்கள் மற்றும் குழந்தைகள் ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். மலைகளின் ராணி என்றழைக்கப்படும நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் காலத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகைதருவார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், கோடை சீசனின்Continue Reading