• இந்தியா,  

“இந்தியாவுக்கு வந்தவர்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால், அங்கிருப்பவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. அங்கே வலி இருக்கிறது.” – மோகன் பகவத் இந்துத்துவ தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் பலமுறை, `இந்தியாவிலிருக்கும் முஸ்லிம்களின் முன்னோர்கள் இந்துக்கள்தான். கட்டாயப்படுத்தி அவர்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டனர்’ என்று கூறியிருக்கின்றனர். இப்படியிருக்க, இஸ்லாமியக் குடியரசு நாடான பாகிஸ்தானில் இருப்பவர்கள், இந்தியாவிலிருந்து பிரிந்ததைத் தவறு என்று நினைப்பதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார். மறைந்த ஹேமு கலானியின்Continue Reading

  • இந்தியா,  

மேற்கு வங்கத்தின் ஜி.எஸ்.டி. பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் என்று மத்திய பா.ஜ.க. அரசை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கினார். மேற்கு வங்கத்தின் மீதான மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரண்டு நாள் தர்ணாவை கடந்த புதன்கிழமையன்று தொடங்கினார். இதுக்குறித்து மம்தா பேசுகையில், அவர்கள் (மத்திய பா.ஜ.க. அரசு) கூட்டாட்சி அமைப்பை சீரழித்து வருகின்றனர். பா.ஜ.க. அல்லாத அனைத்து மாநிலங்களையும்Continue Reading

  • இந்தியா,  

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை கேட்டு தொடரப்பட்ட வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதத்தை குஜராத் நீதிமன்றம் விதித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் முதுகலை பட்டத்தின் விவரங்களை வழங்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு அளித்தார். இந்த மனு தொடர்பாக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு தலைமை தகவல் ஆணையம் எனப்படும் சிஐசி உத்தரவிட்டது. அதனை எதிர்த்து நீதிமன்றத்தில்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

திருநெல்வேலி அருகே ரயிலில் அடிபட்டு தந்தையும், 5வயது மகனும் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் மேலமுன்னீர்பள்ளம் அன்னைநகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று இரவு 2 பேர் இறந்து கிடந்தனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற மக்கள், முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பார்த்தபோது, ஒரு வாலிபரும், ஒரு குழந்தையும் பிணமாக கிடந்ததை கண்டனர்.Continue Reading

  • தமிழ்நாடு,  

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு காவல்துறையால் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட நபர்கள் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜராகினர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரகத்தில் உதவி காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பல்வீர்சிங், குற்ற வழக்குகளில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக வெளியாக புகார் பல்வேறு தரப்பிலும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. இதைத்தொடர்ந்து, உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.Continue Reading

  • தமிழ்நாடு,  

கோவை மாவட்டத்தை “விபத்தில்லா கோவை”யாக உருவாக்கும் நோக்கத்தில் மாநகரின் 6 இடங்களில் காவல்துறை சார்பில் சிறப்பு வாகனத் தணிக்கை முகாம் நடத்தப்பட்டது. கோவை மாநகரத்தில், வாகன விபத்துகள் நடைபெறாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, “விபத்தில்லா கோவையாக” உருவாக்கும் பொருட்டு, கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவுப்படி, கோவை மாநகரில் 6 இடங்களில் (பொள்ளாச்சி ரோடு – ரத்தினம் காலேஜ், பாலக்காடு ரோடு – நேரு காலேஜ், பேரூர் பைபாஸ் ரோடுContinue Reading

  • சுற்றுச்சூழல்,  

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை நெல்லை மாவட்ட பயிற்சி உதவி ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, அகழ்வாய்ப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். பண்டைய தமிழர்களின் நாகரீகத்தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள், இரும்பாலான ஆயுதங்கள், தங்க அணிகலன்கள், வெண்கல பொருட்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, ஆதிச்சநல்லூரில் உலகத்தரம்Continue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவித்தார். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும்Continue Reading

  • வணிகம்,  

நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் விற்பனை செய்யப்படும் நகைகளுக்கு கட்டாயம் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டுமென்ற மத்திய அரசின் உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தியாவில் பல நகைக்கடைகளில் வாங்கப்படும் தங்கம் சுத்த தங்கமாக இருப்பதில்லை எனத்தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் தங்க நகைகளை விற்கும்போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என நகைக்கடைகளுக்கு மத்திய அரசுContinue Reading

  • தமிழ்நாடு,  

சென்னை அடையாறு கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 2 நாட்களாக மாணவிகள் நடத்திவந்த உள்ளிருப்புப் போராட்டம் வாபஸ் பெற்றப்பட்டுள்ளது. சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணிதேவி கல்லூரி கலை கல்லூரி இயங்கிவருகிறது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் செயல்படும் இந்தக் கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தக் கல்லூரியில் உள்ள ஆசிரியர்Continue Reading