• Top News,  சினிமா,  

செப்டம்பர்,02- தனது சினிமா வாழ்க்கையில் ரஜினிகாந்த் இருமுறை பெரும் சறுக்கல்களை சந்தித்தார். முதல் முறை ‘பாபா’படத்தின் போது.அவரே தயாரித்த பாபா படம் படுதோல்வி அடைந்தது.இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு ரஜினிகாந்த் நஷ்டஈடு கொடுத்தார். ‘ரஜினியின் ஆட்டம் குளோஸ்’என அப்போது கோடம்பாக்கத்தில் ஒரு கூட்டம் ஆர்ப்பரித்தது.இதனை தொடர்ந்து நடித்த சந்திரமுகி மிகப்பெரும் வெற்றி பெற்றது.அதன் வெற்றிவிழாவில் தான் தனது ஆதங்கத்தை கொட்டினார், ரஜினி. ‘’நான் யானை இல்லை.சறுக்கி விழுந்தா எந்திருக்காம இருக்க.Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

செப்டம்பர்,02- ஓவியத்துக்கும்,சிற்பத்துக்கும் விழிகள் எவ்வளவு முக்கியமோ அது போல் திரைப்படங்களுக்கு ‘டைட்டில்’ பிரதான அம்சம்.பொறுக்கி பொறுக்கி அந்த காலத்தில் தலைப்பை தேர்வு செய்தார்கள், இயக்குநர்கள். இப்போதைய இயக்குநர்கள் பொறுக்கி டைட்டிலை தேர்ந்தெடுக்காவிட்டாலும் பரவாயில்லை.அடுத்தவர்கள் வைத்த டைட்டிலை கொஞ்சம் கூட ‘ லஜ்ஜை’ இல்லாமல் தங்கள் படங்களுக்கு சூட்டிக்கொள்கிறார்கள். தொழில் நுட்பத்தில் பல்வேறு புரட்சிகளை அறிமுகம் செய்த கமல்ஹாசனும் இதற்கு விதி விலக்கல்ல. டெக்னிக்கல் விஷயங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து, குள்ளContinue Reading

  • Top News,  சினிமா,  

செப்படம்பர், 02- இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ச்சியாக திரைப்படங்கள் எடுத்த, பெரிய நிறுவனங்கள் இப்போது சினிமாக்கள் தயாரிப்பதில்லை.ஏவிஎம், விஜயா- வாகினி,சத்யா மூவீஸ்,சிவாஜி பிலிம்ஸ்,சூப்பர் குட் பிலிம்ஸ், பஞ்சு அருணாசலத்தில் பி.ஏ.ஆர்ட்ஸ், இளையராஜாவின் பாவலர் கிரியேஷன்ஸ் போன்ற நிறுவனங்கள் படம் எடுக்கும் ஆசையை மறந்தே போனார்கள். உச்ச நடிகர்கள் சம்பளம் 100 கோடி ரூபாயை தாண்டி விட்டது. அவர்கள் வாங்கும் ஊதியத்தில் பாதியை பிரமாண்ட இயக்குநர்கள் கேட்கிறார்கள். பல கோடிகளைContinue Reading

  • Top News,  

*ஒரே நாடு,ஒரே தேர்தல் என்ற கருத்தை செயல்படுத்த மத்திய பாஜக அரசின் நடவடிக்கை ஆரம்பம் .. சாதக பாதகங்களை ஆராய்ந்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைப்பு. *நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை ஒவ்வொரு மாநிலத்திலும் விரைவாக முடிப்பது என்று மும்பையில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் முடிவு … மக்களவைத் தேர்தலை ஒன்றாக சந்திக்கவும் திட்டம். *இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

செப்டம்பர்,01- கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் வருமானத்திற்கு அதிகமாக 1கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 2012ஆம் ஆண்டு அவர் விடுவிக்கப்பட்டார். அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது.இந்த நிலையில் 11 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கை தாமாக முன்Continue Reading

  • Top News,  சினிமா,  

செப்டம்பர்,01- கடந்த 90- ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த வடிவேலு விறு விறுவென முன்னேறி கவுண்டமணியையே கவிழ்த்து விட்டு நம்பர் 1 நகைச்சுவை நடிகர் ஆனார். பாரதிராஜா, ஆர்.வி.உதயகுமார், ஷங்கர் ஆகியோரால் செதுக்கப்பட்ட அவர் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’படத்தில் கதாநாயகனாக நடித்தார்.ஷங்கர் தயாரித்த இந்தப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதன் பின் ஹீரோவாக நடிக்கவே வடிவேலு ஆசைப்பட்டார். இந்திரலோகத்தில் அழகப்பன், தெனாலிராமன்,எலி என அவர் நாயகனாகContinue Reading

  • Top News,  சினிமா,  

செப்டம்பர்,01- ரஜினிகாந்த் நடித்து சிறுத்தை சிவா இயக்கிய ‘அண்ணாத்த’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.இதனால் அந்தப் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரஜினி மீண்டும் கால்ஷீட் கொடுத்தார்.அந்தப்படம் தான்,‘ஜெயிலர்’.நெல்சன் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்தப்படம் 525 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளதாக சன் பிக்சர்ஸ்Continue Reading

  • Top News,  

*முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து சிவகங்கை நீதிமன்றம் விடுவித்தது தொடர்பான வழக்கை தாமாக முன் வந்து சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை….பன்னீரும் லஞ்ச ஒழிப்புத் துறையும் பதில் அளிக்க உத்தரவு *தமிழ் நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை ஆட்சி மாற்றத்துக்கு ஏற்ப பச்சோந்தி போல செயல்படுவதாக நீதிபதி ஆனந்த் வெங்கேடேஷ் கருத்து … லஞ்ச ஒழிப்புத் துறை தோற்றுContinue Reading

  • Top News,  இந்தியா,  

ஆகஸ்டு,31- உத்தரபிரதேச மாநிலம் கோண்டா பகுதியை சேர்ந்தவர் அபர்ஜித். கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அபர்ஜித்தை துப்பாக்கி முனையில் வழிமறித்த இரண்டு பேர், அவரது பைக், செல்போன், மற்றும் பர்சை பறித்துக்கொண்டுதப்பிச்சென்றனர். இது குறித்து அபர்ஜித் அங்குள்ள சாபியா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.இந்த கொள்ளை தொடர்பாக அங்கித் வர்மா உள்ளிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதனால் அங்கித் தலைமறைவானார்.Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஆகஸ்டு, 31- பீகார் மாநில முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் பதவி வகித்து வருகிறார். லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி.கட்சியும் , காங்கிரசும் இந்த கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன. பீகார் மாநில பள்ளிக்கல்வித்துறை, அரசு பள்ளிகளின் விடுமுறை நாட்களை குறைத்து வெளியிட்டுள்ள அறிவிப்பு அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து பண்டிகைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த விடுமுறை நாட்கள் கணிசாமாக குறைக்கப்பட்டிருப்பதே இதற்கான காரணம். நடப்பு ஆண்டில்Continue Reading