• Top News,  

*காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி தமிழ் நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம் .. மூன்று நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வை உடனே அமைப்பதாக தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு. *சந்திராயன் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்குவதற்கான இடத்தை தேர்வு செய்வதற்கு 4 படங்களை அனுப்பி வைத்தது.. லேண்டர் அனுப்பிய படங்களை ஆய்வு செய்துContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு, 21- மதுரை அதிமுக மாநாடு அந்த கட்சிக்கு திருப்புமுனையை ஏற்படுத்துமோ இல்லையோ, எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கையில் புதிய உதயத்தை உருவாக்கி விட்டது. ஜெயலலிதா மறைவுக்கு முன் பத்தோடு பதினொன்றாக அதிமுகவில் இருந்த அவர், இன்று கட்சிக்குள் மட்டுமின்றி,தமிழகத்திலும் பெருந்தலைவராக உருவெடுத்து விட்டார். மதுரை மாநாடு அதற்கு சாட்சியாக அமைந்துள்ளது.அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பின்பு,தென் மாவட்டங்களில் அதிமுகவை பலப்படுத்துவதற்காகவும், தனக்குள்ள செல்வாக்கை நிலைநாட்டவும் பழனிசாமிமதுரையில் இந்த மாநாட்டைContinue Reading

  • Top News,  

*குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும்… மதுரை அதிமுக மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம். *தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக பயன்படுத்துமாறு கோரிக்கை .. திருக்குறளை தேசிய நூலக அறிவிக்குமாறும் தீர்மானத்தில் அதிமுக வலியுறுத்தல். *அதிமுக மாநாட்டை முன்னிட்டு 51 அடி உயரக் கம்பத்தில் கொடி ஏற்றி வைத்தார் எடப்பாடி பழனிசாமி … வானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மலர்களை தூவிContinue Reading

  • Top News,  இந்தியா,  சினிமா,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு,20- நடிகர் ரஜினிகாந்தின் இமயமலை பயணம் இந்த முறை சாமன்ய மக்களுக்கும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ‘மலைக்கு போனோமா.பாபாஜி குகையில் தியானம் செய்தோமா’ என்கிற அளவிலேயே அவரது பயணம் சுருக்கமாக இருக்கும். ஆனால் இந்த முறை அப்படி இல்லை. பயணத்தை முடித்துகொண்டு ரஜினி ஊர் திரும்பவில்லை.மாநிலம் மாநிலமாக சென்று அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.சொல்லி வைத்த மாதிரி அனைவருமே பாஜக தலைவர்கள்.பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்கள். ரஜினியின் திட்டம் என்ன?Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஆகஸ்டு,20 – திருப்பதி ஏழுமலையான் குடிகொண்டுள்ள சேஷாசலம் காட்டுப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுத்தைகள், கரடிகள் உலா வருகின்றன. அவை அடிக்கடி அலிபிரி மலைப்பாதைக்குள் நுழைந்து வெங்கடேசபெருமானை தரிசிக்க செல்லும் பக்தர்களை அச்சுறுத்துகிறது. சில தினங்களுக்கு முன் மலைப்பாதை மார்க்கமாக பெற்றோருடன் சாமி கும்பிட சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை அடித்துக் கொன்றது.இதனால் திருப்பதி கோயில் நிர்வாகம் மலைஏறும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கி வருகிறது.மலைஏறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. சிறுத்தைளைContinue Reading

  • Top News,  இந்தியா,  உலகம்,  

ஆகஸ்டு,20 . நிலவில் தென் துருவத்தில் முதலில் இறங்கப் போவது இந்தியாவின் சந்திராயன் – 3 விண்கலமா அல்லது ரஷ்யாவின் லூனா விண்கலமா என்பதை அறிய உலகம் முழுவதும் பெரும் ஆர்வம் நிலவுகிறது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 என்ற விண்கலத்தை கடந்த மாதம் 14- ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இதே தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக  ரஷ்யா, லூனா-25Continue Reading

  • Top News,  

*மதுரையில் நாளை நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கு ஐந்து லட்சம் சதுர அடியில் பிரமாண்ட பந்தல், 300 ஏக்கரில் வாகனம் நிறுத்தும் இடம் அமைப்பு.. மாநாட்டுக்கு வருகிறவர்களுக்கு உணவளிக்க பிரமாண்ட சமையல் கூடம். *தமிழ்நாட்டின் அனைத்து இடங்களில் இருந்தும் அதிமுகவினர் வாகனங்களில் மதுரை நோக்கி பயணம் .. எடப்பாடி பழனிசாமியின் பலத்தைக் காட்டுவதற்கு 15 லட்சம் பேரை திரட்டிக் காட்ட ஆதரவாளர்கள் ஏற்பாடு. *கச்சத்தீவை 1974- ஆம் ஆண்டில் மத்தியContinue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்டு,19- மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த ’மாமன்னன் ‘ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 29- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையுல் குவித்தது. மாமன்னன் திரைப்படம் 50 நாட்களை கடந்து ஓடும் நிலையில் இதன்Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஆகஸ்டு,19- 80 மக்களவை உறுப்பினர்களை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு எம்.பி.மட்டுமே இருக்கிறார்.அவர் ,சோனியா காந்தி.பாஜக, சமாஜ்வாதி,பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அடுத்இடத்தில் 5 சதவீத வாக்குகளோடு அந்த மாநிலத்தில் நோஞ்சான் குழந்தையாக காங்கிரஸ் உள்ளது. உ.பி.மாநில காங்கிரஸ் தலைவராக தலித் சமூகத்தை சேர்ந்த பிரிஜ்லால் காப்ரி பதவி வகித்து வந்தார்.அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள மாநிலங்கள் தோறும் தலைவர்களை மாற்றி வரும்Continue Reading

  • Top News,  இந்தியா,  

  ஆகஸ்டு,19- திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த மர்ம நாவல் போன்று, மகாராஷ்டிர மாநில அரசியலில் விதம் விதமான காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென அங்கிருந்து வெளியேறினார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவை பெற்று முதலமைச்சர் ஆனார். அவரை கவிழ்க்க சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டேயுடன் பாஜக பேரம் பேசியது. பாஜக வலையில் அவர்Continue Reading