• Top News,  

*காவிரியில் பத்து டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுவதாக அறிவித்ததை செயல்படுத்தத் தொடங்கியது கர்நாடக அரசு.. அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் அளவு விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. *நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆகஸ்டு 20- ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதம் போராட்டம்.. திமுக இளைஞர் , மருத்துவ, மாணவர் அணிகள் கூட்டாக அறிவிப்பு. *மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டின்Continue Reading

  • Top News,  இந்தியா,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு,16- சுதந்திர தின விழா மேடைகளில் பொதுவாக அரசியல் வாசம் வீசுவதில்லை. தமது அரசுகள் நிறைவேற்றிய திட்டங்களை பிரதமரும், முதல்வர்களும் பட்டியலிடுவார்கள்.ஆனால் டெல்லி செங்கோட்டையில் நேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திரதின உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, மக்களவை தேர்தல் பிரச்சார மேடையாக அதனை மாற்றிக்கொண்டார். தொடக்கத்தில் அரசின் சாதனைகளை பெருமிதம் பொங்க விளக்கினார். பின்னர் ட்ராக் மாற ஆரம்பித்தார்.’மீண்டும் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15- ஆம் தேதிContinue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்டு,16- தமிழ் சினிமாவில் கதாநாயகர்களின் பிம்பம் கட்டமைக்கப்படுவதற்கு, வில்லன் நடிகர்களே ஆதி முதல்ஆணி வேராக இருந்து வந்துள்ளனர்.எம்.ஜி.ஆருக்கு நம்பியார், ரஜினிக்கு ரகுவரன் என பொருத்தி,படத்தை வெற்றி அடையச்செய்தனர், இயக்குநர்கள்.வில்லன்களின் குரூர முகத்தை கிழித்து, நீதியை நிலைநாட்டியதால் சினிமா ஹீரோக்கள் நிஜமான நாயகன்களாக வலம் வந்தனர். பேட்ட, மாஸ்டர்,விக்ரம் ஆகிய படங்களின் வெற்றிக்கு வில்லன் விஜய்சேதுபதி .பெரும் காரணியாக இருந்தார். இதனால், நாயகனை முடிவு செய்யும் டைரக்டர்கள், யாரை வில்லனாக படத்துக்குள்Continue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்டு,16- நந்தா- பிதாமகன் படங்களை தொடர்ந்து இயக்குநர் பாலாவும், நடிகர் சூர்யாவும் ‘வணங்கான்’படத்துக்காக இணைந்தனர். சூர்யா, கீர்த்தி ஷெட்டி ஜோடியாக நடிக்க, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கன்னியாகுமரியில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. சில நாட்களில் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. முட்டல்-மோதல் விரிந்து பரந்ததால், படத்தில் இருந்து சூர்யா விலகிகொண்டார்.   ‘இந்தக் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களால், சூர்யாவுக்கு இது உகந்ததாக இருக்குமா என்றContinue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்டு,16- ஜெயிலர் படத்தில் எந்திர துப்பாக்கிகளை தோளில் சுமந்து சாகசம் செய்த ரஜினிகாந்த், கையில் கம்பு ஊன்றி, போலீஸ் துணையுடன் பாபாஜி குகைக்கு நடந்து செல்லும் போட்டோக்கள் ரசிகர்களை மனம் கலங்க வைத்துள்ளன. படங்களில் நடித்து முடித்ததும்,பெரிய ஹீரோக்கள் வெளிநாடுகளுக்கு பறந்து சென்று ஓய்வு எடுப்பார்கள்.உல்லாசமாய் இருப்பார்கள். ஆரம்பத்தில் ரஜினிகாந்தும் அப்படித்தான் இருந்தார். பத்து, பதினைந்து ஆண்டுகளாக அவருக்கு கேளிக்கைகளில் நாட்டம் இல்லை. இமயமலைக்கு சென்று புனித ஸ்தலங்களில் பூஜை,Continue Reading

  • Top News,  

* நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்… டெல்லி செங்கோட்டையில் 10வது முறையாக தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி. * ஒட்டுமொத்த நாடும் மணிப்பூர் மக்களுக்காக துணை நிற்கிறது… செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேச்சு. * மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்… மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக மோடிContinue Reading

  • Top News,  இந்தியா,  

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில்  ராம பிரானுக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு வருகிறது. 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி  கோவிலின் கட்டுமானப்பணிகளை துவக்கி வைத்தார், வரும் ஜனவரி மாத  இறுதியில்  ராமர் கோயில் திறக்கப்படுகிறது. இதனைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வர உள்ளனர். அங்குள்ள பல ஓட்டல்களில் முன்பதிவு முடிந்துள்ளது. தலைநகர் லக்னோ மற்றும் பிற நகரங்களில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாகContinue Reading

  • Top News,  இந்தியா,  

ஆகஸ்டு, 15- நாட்டின் 77- வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுவது இது 10- வது முறையாகும். 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மோடி பேசியதாவது .. உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக இந்தியர்கள் உருவாகி உள்ளனர். இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின்Continue Reading

  • Top News,  சினிமா,  

—– இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தமிழ்க்குடிமகன்’ என்ற படத்தை இசக்கி கார்வண்ணன் டைரக்டு செய்துள்ளார். ஸ்ரீபிரியங்காநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் இயக்குநர்கள்லால்,எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கிய வேடத்தில் வருகிறார்கள். இந்த படத்தின் இசை  வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இயக்குநர் தங்கர் பச்சான் கலந்து கொண்டு, நீண்ட சொற்பொழிவு நிகழ்த்தினார்.தமிழகத்தில் நிலவும் சாதிபாகுபாட்டை விமர்சித்தவர், தமிழ் சினிமாக்களையும் ஒரு பிடி பிடித்தார்.அவரது ஆவேச உரை: ‘கிராமத்தில்  இருந்து நான், 14 வயதில் சென்னைக்குContinue Reading

  • Top News,  சினிமா,  

-ஆகஸ்டு, 15- நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிளஸ்–2 மாணவர் சின்னத்துரையும், அவரதுதங்கை சந்திரா செல்வியும் வீடு புகுந்து அரிவாளால் வெட்டப்பட்டனர். இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கொடுர தாக்குதலில் ஈடுபட்டதாக பிளஸ்–2 மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு ஆளான இருவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்.சாதிய வன்மத்தால் நிகழ்ந்த இந்த குரூர சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் என பல தரப்பினரும்Continue Reading