• Top News,  தமிழ்நாடு,  

ஜுலை,21- எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவை  தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவருமே , எந்த பிரச்சினையிலும் வாய் திறப்பதில்லை. எடப்பாடி பழனிசாமியின் கைக்கு அதிமுக வந்தபின், மாஜிக்கள், மாவட்டங்கள் என எல்லோருமே பொளந்து கட்டுகிறார்கள்.பலரின் பிதற்றல்களும்,உளறல்களும் பொடியன்கள் கூட பரிகாசம் செய்யும் அளவுக்கு எல்லை மீறி போய் விடுகிறது. சம்மந்தமில்லாமலும், சர்ச்சையாகவும் பேசுவதில் இன்றைக்கு அதிமுகவில் நம்பர் -1 ஆக இருப்பது திண்டுக்கல் சீனிவாசன்.Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் செய்ய இருந்த பாதையில் அரசு பேருந்து விபத்தில் சிக்கியதால் போலிஸ் அதிகாரிகள் பெரும் பதற்றத்திற்கு ஆளானார்கள். சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் 25 ஜி என்ற எண் கொண்ட பேருந்து காலை 11: 40 மணி அளவில் அண்ணா சதுக்கத்தில் புறப்பட்டு அண்ணா மேம்பாலம் வந்து கோடம்பாக்கம் செல்வதற்கு கீழே இறங்கும் போது பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி விபத்துக்கு ஆளானது. சுவரில் சிக்கிக்Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஜுலை,21- அவதுதூறு வழக்கில் விதிக்கப்பட்டு உள்ள இரண்டு ஆண்டு சிறைத்  தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க குஜராத் அரசுக்கும், புர்னேஷ் மோடிக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அவதூறு வழக்கில் குற்றவாளி என்று  சூரத் நீதிமன்றம் கூறிய தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சக்,  கடந்த 8-ஆம் தேதி கூறியContinue Reading

  • Top News,  இந்தியா,  

ஜுலை, 21- மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்களின் ஆடைகளை அவிழ்த்து அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்றக் கும்பலை சேர்ந்த நான்கு பேர் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  மற்றவர்களை தேடிக்கொண்டிருப்பதாக மணிப்பூல் மாநில அரசு தெரிவித்து இருக்கிறது, அந்த மாநிலத்தில் கடந்த மே மாதம் 3- ஆம் தேதி முதல் குக்கி மற்றும் மோத்யா சமூகத்திடையே மோதல்கள் நிகழ்ந்து வருவ நாடறிந்த செய்திதான். கலவரம் மூண்டதற்கும் மறு நாளான மேContinue Reading

  • Top News,  சினிமா,  

மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா, அண்மைக்காலமாக, ஆன்மிகத்தில் மூழ்கி விட்டார். நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா செல்ல இருக்கும் சமந்தா, சினிமாவை விட்டு விலகும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களைத்தவிர, புதிய படங்களில் நடிக்க அவர் யாருக்கும் கால்ஷீட் கொடுக்கவில்லை. சில இயக்குநர்களிடம் அவர் கதைகள் கேட்க நேரம் ஒதுக்கி இருந்தார். அதனை எல்லாம், ரத்து செய்துவிட்டார். சிகிச்சை பெற்று அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் அவர்Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஜுலை,21- மண்டையை பிளக்கும் வெயில் கொளுத்தும் ஏப்ரல் மாத கடைசியில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் இப்போதே ‘நீயா ?நானா?’ ஆட்டத்தை  ஆரம்பித்து விட்டன. செவ்வாய்க்கிழமை பெங்களூருவில்  காங்கிரஸ் ஏற்பாடு செய்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்துக்கு, ஸ்டாலின், மெஹ்பூபா முப்தி, சரத்பவார், மம்தா என நான்கு திசைகளில் இருந்து தலைவர்கள் வந்திருந்தனர்.’இந்தியா’என இந்த கூட்டணிக்கு பெயர் சூட்டப்ட்டது. 26  கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.இதில்Continue Reading

  • Top News,  சினிமா,  

முன்பெல்லாம் சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களில்தான் தமிழ் உள்ளிட்ட  தென்னகப்படங்களின் ஷுட்டிங் நடைபெறும். நாளாவட்டத்தில் சென்னையில் இருந்த ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஸ்டூடியோக்கள் மூடப்பட்டன. அவை கல்யாண மண்டபங்களாகவும், அடுக்கு மாடிக் குடியிருப்புகளாகவும் வடிவம் கொண்டன. ஐதராபாத், திருவனந்தபுரம், பெங்களூரு போன்ற ஊர்களில் புதிதாக கட்டப்பட்ட ஸ்டூடியோக்களில்,அங்குள்ள மொழிப்படங்களின் படப்பிடிப்பை, நடந்த ஆரம்பித்தனர். ஐதராபாத்தில் உருவான ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நவீன வசதிகள் உள்ளதால், பெரிய தமிழ் படங்களின் ஷுட்டிங்குகளும் அங்குContinue Reading

  • Top News,  

*மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைக் கும்பலால் பெண்கள் நிர்வாண ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சியால் நாடு முழுவதும் அதிர்ச்சி… உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தலையிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை. *குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகளை விளக்கம் வேண்டும்..மணிப்பூர் வழக்கை நாளை விசாரிப்பதாகவும் தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வு அறிவிப்பு. *மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை மன்னிக்க முடியாத குற்றம்.. குற்றவாளிகை தப்பவிடமாட்டோம்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

அமைச்சர் பொன்முடி மீதான சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் மேலும் 5 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. செம்மண் குவாரிகளை பொன்முடி தனது பினாமிகளுக்கு ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு 28 கோடி ரூபாய்  இழப்பு ஏற்பட்டது என்பது வழக்காகும்.இது தொடர்பாக பொன்முடி, மகன் கவுதம சிகாமணி, திமுக நிர்வாகிகள் கோதகுமார், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 போ் மீது கடந்த 2012-ஆம் ஆண்டில்Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஜுலை,20- மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று மூன்று மாதங்கள் ஆன பின்னர் வீடியோ வெளியாகி நாடே கண்டனக் குரல் எழுப்பவுதால் ஒருவரை கைது செய்து இருப்பதாக அந்த மாநில அரசு இன்று தெரிவித்து இருக்கிறது. வீடியோ வெளியான பின்னர் பல தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது. அந்த வீடியோவில் உள்ள ஒருவன் கைது செய்யப்பட்டு உள்ளான்.இவன் தான் அந்த நிகழ்வின் மூளையாக செயல்பட்டவன்.மற்றவர்கள் மீதும்Continue Reading