• Top News,  சினிமா,  

ஜுலை,12- தனியார் தொலைக்காட்சிகளில் புதிய சினிமாக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டபோது, தமிழக  திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்குரல் எழுப்பினர். ‘தியேட்டர்களில் படங்கள் வெளியாகி , 6 மாதங்கள் கழித்தே டிவிக்களில் ஒளிபரப்ப வேண்டும்’ என கெடு வைத்தனர். இந்த கோரிக்கையை, சில தயாரிப்பாளர்களே ஏற்கவில்லை. தியேட்டரில் வெளியாகி ஓடாத படங்களை நல்ல விலைக்கு தனியார் தொலைக்காட்சிகளுக்கு தயாரிப்பாளர்கள் விற்று காசு பார்த்தனர். ஒடாத அந்த படங்கள் சில நாட்களிலேயே டிவிக்களில் ஒளிபரப்பானது. தியேட்டர்Continue Reading

  • சினிமா,  

ஜுலை,12- தேனி அல்லிநகரத்தில் இருந்து சினிமா கனவில் சென்னை நகருக்கு வந்த பாரதிராஜாவை அடையாளம் கண்டு, அவரை இயக்குநர் ஆக்கியவர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. தனது அம்மன் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் ராஜ்கண்ணு தயாரித்த 16 வயதினிலே படம், தமிழ் சினிமாவில் புதிய அலையை உருவாக்கியது. கனவு தொழிற்சாலைக்குள்  நட்சத்திரங்கள், இயக்குநர்கள் போன்ற புதிய வரவுகளுக்கு பாதை போட்டது ராஜ்கண்ணுவின் அந்தப்படம் தான். 1977 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் கமல்ஹாசன், ரஜினிகாந்த்,Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

சேலம் மாவட்ட தொழில் முனைவோரை கடந்த ஒருவாரமாக பெண் ஒருவர் உலுக்கிக் கொண்டிருக்கிறார். அடையாளம் தெரியாத அந்த பெண்ணிடம் இருந்து எடப்பாடியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு மூன்று நாட்களுக்கு முன் ஆபாசப் படங்கள் வந்ததுதான் பிரச்சினையின் ஆரம்பம். படஙகளைப் பார்த்து அதிர்ந்துப் போன அவர், அதனை அழித்துவிட்டு மற்ற நண்பர்களிடம் தகவலை தெரிவித்தார். அவர்களும் தங்களின் செல்போன் வாட்ஸ் அப் க்கு ஆபாசப் படங்களை பெண் ஒருவர் அனுப்பி உள்ளார்Continue Reading

  • Top News,  சினிமா,  

தமிழில் ஷங்கர் போல், தெலுங்கில் பிரமாண்ட  சினிமாக்களை கொடுக்கும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவர் இயக்கிய பாகுபலி இரண்டு பாகங்களும் பெரும் வெற்றி பெற்றன. இந்தியாவை தாண்டி ராஜமவுலியை அந்த படங்கள் அடையாளம் காட்டின. இதனை தொடர்ந்து ராஜமவுலி இயக்கிய மற்றொரு பிரமாண்ட படைப்பு ஆர்.ஆர்.ஆர். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்,அஜய்தேவ்கன்,அலியாபட், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்த இந்தப்படம் உலக அளவில் பேசப்பட்டது.1300 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனையை படைத்தது. ஆர்ஆர்ஆர்.Continue Reading

  • Top News,  இந்தியா,  தமிழ்நாடு,  

தலைவர்கள் இரு தொகுதிகளில் போட்டியிடுவது சகஜம். பாரம்பர்ய தொகுதியில் அதிருப்தி நிலவும் பட்சத்தில் அந்த தொகுதியில் போட்டியிடும்  தலைவர் ,பாதுகாப்பு கருதி இன்னொரு தொகுதியிலும் மனு செய்வார். அதற்கு உதாரணம் ,ராகுல்காந்தி. குடும்பத்தொகுதியான அமேதியில் வெற்றி பெறுவது கடினம் என கணிப்புகள் சொன்னதால், கடந்த மக்களவை தேர்தலில் ராகுல்காந்தி அமேதி தவிர வயநாடு தொகுதியிலும் களம் இறங்கினார். நினைத்த மாதிரியே அமேதி, ராகுல் காலை வாரியது.வயநாட்டில் வென்றார். எந்த தொகுதியில்Continue Reading

  • Top News,  

*அமலாக்கத் துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவியை 3- வது முறையாக நீட்டித்ததை ரத்து செய்து உச்ச நீதின்றம் பரபரப்புத் தீர்ப்பு.. ஜுலை இறுதி வரை மட்டும் பணியில் தொடர அனுமதி வழங்கி உத்தரவு. *அமலாக்கத்துறை இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு தந்த பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவேண்டும் … காங்கிரஸ் வலியுறுத்தல். *மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை.. மூன்றில் இரண்டுப் பங்குக்கும் அதிமானContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஜூலை, 11- செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் ஆட்கொணர்வு மனு, மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையினரால் கைது செய்ய முடியும்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருப்பதுதான் அதிமுக என்பதை தேர்தல் ஆணையம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்றும் இதோ போன்று அந்தக் கட்சியின் தலைமை நிர்வாகிகள் பெயரும் பதியப்பட்டு இருக்கிறது.  இதனால் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இனி அதிமுக என்று அதிகாரப்பூர்வமாக சொல்லிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் தேர்தல்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

சொகுசாக உட்கார்ந்துகொண்டு வன்மங்களை விதைப்பவர்களால் அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக சென்னையில் காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை என்று கூறிய அவர் சட்டம் ஒழுங்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்றார்.நிம்மதியாக உள்ள நாட்டில் தான் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றும் முதலமைச்சசர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது..Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  விவசாயம்,  

ஜுலை, 11 – தமிழகத்தில் மதுக்கடைகளை தனியார் ஏலம் எடுத்து, மது விற்பனை செய்தபோது ‘டெட்ரா பேக்’ எனப்படும் காகித டப்பாவில் மதுபானம் விற்கப்பட்டது. விலை குறைவு என்பதால் ’டெட்ரா பேக்’ மது விற்பனை அமோகமாக இருந்தது. ஆனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.பின்னர் அரசாங்கமே மது விற்பனையில் நேரடியாக இறங்கியபோது ’டெட்ரா பேக்’ விற்பனை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் காகித டப்பாக்களில் மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம்Continue Reading