மீனவ;h கிராமத்தில் ஒரு வாரம் தங்க கீர்த்தி சுரேஷ் திட்டம் !

ஆகஸ்டு,24-

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, கடைசியாக ‘கஸ்டடி’ என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கில் உருவான இந்தப் படத்தை நம்ம ஊர் டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

நாக சைதன்யா அடுத்து நடிக்கும் படத்தை சந்து மொன்டேட்டி இயக்குகிறார். இவர், ‘கார்த்திகேயா’, ‘கார்த்திகேயா 2’ ஆகிய படங்களை இயக்கியவர். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தக் கதை உருவாகிறது.

மீனவர்களின் வாழ்க்கையை பற்றிய இந்தப் படத்துக்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மீனவ கிராமத்துக்குச் சென்ற நாக சைதன்யா, மீனவர்களை சந்தித்துப் பேசினார். அவர்களின் வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டார்.

இந்தப் படத்தில் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் உள்ளது. நாக சைதன்யா ஜோடியாக சாய் பல்லவி அல்லது கீர்த்தி சுரேஷ் நடித்தால் யதார்த்தமாக இருக்கும் என இயக்குநர் கருதினார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ், அந்த படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் அவர் மீனவப் பெண்ணாக நடிக்கிறார். இதனை அடுத்து கீர்த்தி சுரேஷ் மீனவ பெண்களின் பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவரை ஒரு வாரம் மீனவ பெண்களுடன் தங்க வைக்க படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *