விஜய்க்கு மகிழ்ச்சி தந்த இயக்குநர் ஷங்கர் சொன்ன அரசியல் கதை.

பிரமாண்ட படங்களின் பிதாமகனான இயக்குநர் ஷங்கர்,ஆரம்பத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

எஸ்.ஏ.சி.யின் மகன் விஜயை வைத்து அவர் ஜீன்ஸ் படத்தை  இயக்குவதாக இருந்தார். இந்தப்படத்துக்காக ஷங்கர் கேட்ட தேதிகள் மலைக்க வைப்பதாக இருந்ததால் விஜய், அதில் நடிக்கவில்லை.

இந்திப்படமான ’த்ரி இடியட்ஸ்’ தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டபோது  ஷங்கருடன் விஜய் இணையும் வாய்ப்பு உருவானது. ‘நண்பன் ‘ என்ற பெயரில் தயாரான அந்தப் டம் பெரிய வெற்றி அடைந்தாலும் மீண்டும்  ஷங்கர்-விஜய் சேர்ந்து படம் செய்யவில்லை. நீண்ட காலத்துக்கு பிறகு இருவரும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் டைரக்‌ஷனில்  உருவாகும் லியோ படத்தில் நடிக்கும் விஜய், தனது போர்ஷனை முடித்து கொடுத்து விட்டார். இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் விஜயை அண்மையில் சந்தித்த ஷங்கர் அரசியல் களம் சார்ந்த கதை ஒன்றை சொல்லியுள்ளார். விஜய் அரசியலில் ஈடுபடும் ஆயத்தங்களை ஆரம்பித்துள்ளதால் ஷங்கர் சொன்ன கதை விஜய்க்கு ரொம்பவும் பிடித்து போயிற்று. அடுத்த கட்ட பணிகளை தொடங்குமாறு கூறியுள்ளார்.

இந்தியன் -2, கேம் சேஞ்சர் படங்களை ஷங்கர் முடிப்பதற்குள் வெங்கட்பிரபு படத்தை விஜய் முடித்து விடுவார். இதன் பின்னர் ஷங்கர்- விஜய் கூட்டணியின் படம் ஆரம்பமாகும் என தெரிகிறது.

இரண்டு பிரமாண்டங்கள் இணைந்த உருவாக்கும் படம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்று நம்பலாம்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *