விஜய் நடிப்புக்கு மூன்று ஆண்டு முழுக்கு,அரசியலுக்கு வர திட்டம்.. வலை தளத்தில் வைரலாகும் தகவல்.

பிரபலங்கள் என்றாலே அவர்களைப் பற்றி ஏதாவது ஒரு வதந்தி இறக்கைக் கட்டி பறப்பது இயல்புதான். இந்த வதந்தி நடிகர் விஜயின் அரசியல் வருகை பற்றியது.

ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து விஜய் நடிக்க உள்ள படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவிலலை. அதனால் அதை ‘தளபதி 68’ என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள்

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தின் வேலைகளில் ஈடுபட்டு உள்ளார். அந்த படம் இன்னும் இரண்டு மாதங்களில் திரைக்கு வரவுள்ளது. அதன் பிறகு வெங்கட் பிரபு – விஜய் கூட்டணியில் உருவாகும் தளபதி 68 படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்கும் என்ற  எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டு விட்டது.

இந்நிலையில் தளபதி 68 படத்துக்கு பிறகு நடிப்பதில் இருந்து மூன்று ஆண்டுகள் விலகி இருக்க விஜய் முடிவு எடுத்து உள்ளார் என்பதுதான் அந்த வதந்தி. அந்த மூன்று ஆண்டுகளுக்கும் 2026- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. விஜய்  மூன்று ஆண்டுகள் நடிப்புக்கு முழுக்குப் போடுவார் என்ற தகவல் ரசிகர்களுக்கு அதிரிச்சியை ஏற்படு்த்தினாலும் அவர் அரசியலுக்கு வருவார் என்ற செய்தி புது விதமான உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உண்மையிலேயே நடிகர் விஜய் மூன்று ஆண்டுகள் நடிப்புக்கு முழுக்குப் போடப் போகிறாரா என்பதுதான்  இப்போதைய கேள்வி.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *