ஆகஸ்டு,16-

தமிழ் சினிமாவில் கதாநாயகர்களின் பிம்பம் கட்டமைக்கப்படுவதற்கு, வில்லன் நடிகர்களே ஆதி முதல்ஆணி வேராக இருந்து வந்துள்ளனர்.எம்.ஜி.ஆருக்கு நம்பியார், ரஜினிக்கு ரகுவரன் என பொருத்தி,படத்தை வெற்றி அடையச்செய்தனர், இயக்குநர்கள்.வில்லன்களின் குரூர முகத்தை கிழித்து, நீதியை நிலைநாட்டியதால் சினிமா ஹீரோக்கள் நிஜமான நாயகன்களாக வலம் வந்தனர்.

பேட்ட, மாஸ்டர்,விக்ரம் ஆகிய படங்களின் வெற்றிக்கு வில்லன் விஜய்சேதுபதி .பெரும் காரணியாக இருந்தார். இதனால், நாயகனை முடிவு செய்யும் டைரக்டர்கள், யாரை வில்லனாக படத்துக்குள் கொண்டு வரலாம் என்பதற்காக மெனக்கெடுகின்றனர்.

இந்த நிலையில் விஜய் அடுத்து நடிக்கும் படத்தில் கிரிக்கெட் வீரர் தோனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘லியோ’ படத்தை முடித்துள்ள விஜய்யின் 68- வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா

இசையமைக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 68' என்றுபெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வில்லனாக கிரிக்கெட்வீரர் தோனி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து,கொண்டாடி வருகின்றனர்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *