அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் – தமிழக பட்டியலில் மாற்றம்

ஏப்ரல்.28

தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற தேசிய கட்சிகள் பட்டியலில் இருந்து இரண்டு கட்சிகள் நீக்கப்பட்டதோடு, புதிதாக ஒரு கட்சி சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜக., காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகியவை தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் மாநிலக் கட்சிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்தக் கட்சிகளுக்கு மட்டுமே, தேர்தல் கமிஷன் நடத்தும் கூட்டங்களுக்கு அழைப்பு அனுப்பப்படும். வாக்காளர் பட்டியலும் வழங்கப்படும். மேலும், இந்தக் கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிட முடியும். அந்த சின்னத்தில் வேறு கட்சிகள் போட்டியிட முடியாது. ஒவ்வொரு தேர்தலில் பெறும் ஓட்டு சதவீதம், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்த அங்கீகாரத்தை வழங்குகிறது.

அந்த வகையில், சமீபத்தில் அங்கீகாரம் பெற்ற தேசிய கட்சிகள் பட்டியலில் இருந்த தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய கட்சி அந்தஸ்தை இழந்துள்ளன. ஆம்ஆத்மி கட்சி, புதிதாக தேசிய கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் பட்டியலில் இருந்து, தேசியவாத காங்கிரஸ், திணமுல் காங்கிரஸ் உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன. புதிதாக ஆம்ஆத்மியும் அதில் சேரும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாநில அந்தஸ்து இருப்பதால், அது பட்டியலில் இடம்பெறும்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தே.மு.தி.க. கணிசமான ஓட்டுகளை பெறாவிட்டால், அக்கட்சியும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *