அபுதாபி முதலீட்டாளர்கள் மாநாடு – கேரள முதலமைச்சர் பங்கேற்க மத்திய அரசு தடை

மே.5

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வருகிற 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்து இருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட கேரள முதலமைச்சர், அபுதாபி செல்வதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தார். இது தொடர்பான மனுவை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆய்வு செய்தார். பின்னர், முதலமைச்சர் பங்கேற்கும் அளவிற்கு, அபுதாபியில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பு மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல எனக்கூறி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் அபுதாபி பயணத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அனுமதி மறுத்துள்ளது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *