ஆர்.எஸ்.எஸ்.பேரணிக்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு.

உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து 16-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற உளள் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான வழிமுறைகளை தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு வெளியிட்டு உள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி பேரணியில் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டு இருக்கிறார். பேரணியின் போது எந்த விதமான பாடலோ அல்லது சைகைகளோ காண்பிக்காமல் நடந்து கொள்ளவேண்டும். பொது மக்களுக்கு இடையூறாகவும், வாகன நெரிசல் ஏற்படாத வகையிலும் பேரணி நடத்த வேண்டும்.பேரணியில் கலந்துகொள்வோர் எந்தவிதமான குச்சி, லத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடாது என்றும் டிஜிபி தமது உத்தரவில் தெரிவித்து உள்ளார்..

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *