காதல் மன்னன் என வர்ணிக்கப்படும் நடிகர் ஜெமினி கணேசனின் வாரிசுதான்,இந்தி நடிகை ரேகா.

ஜெமினிக்கும், தெலுங்கு நடிகை புஷ்பவள்ளிக்கும் மகளாக 1954 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். 15 வயதிலேயே கலைச்சேவை செய்ய ஆரம்பித்தார்.

பாலிவுட்டின் மிக அழகான நடிகைகளில் பட்டியலில் ரேகாவின் பெயர் முதலிடத்தில் உள்ளது. வடக்கில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அமிதாப் பச்சன், ராஜ் பப்பார், வினோத் மெஹ்ரா, கிரண் குமார், சத்ருகன் சின்ஹா, சாஜித் கான், அக்ஷய் குமார், சஞ்சய் தத் என ஒரு டஜன் நடிகர்களுடன் இணைத்து பேசப்பட்டவர்.

’’ ரேகா: தி அன்டோல்ட் ஸ்டோரி’என்ற பெயரில் ரேகாவின் சுயசரிதை புத்தகத்தை யாசிர் உஸ்மான் என்பவர் எழுதியுள்ளார். ரேகா, தன்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்களை ,அந்த புத்தகத்தில் யாசிர் உஸ்மான்  வெளிப்படுத்தியுள்ளார்.

யாசிர் உஸ்மான் ரேகா தொடர்பான பல்வேறு ரகசியங்களை அம்பலப்படுத்தியுள்ளார் .அத்தனையும் திடுக்கிடும் ரகம்.

ரேகா, தனது பெண் செயலாளர் பர்சானாவுடன் லெஸ்பியன் உறவில் இருப்பதாக புத்தகத்தில் கூறப்பட்டிருப்பது, அவரது ரசிகர்களை அதிர வைத்துள்ளது.’ரேகாவின் படுக்கையறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட ஒரே நபர் பர்சானா .- அவர்கள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒன்றாக இருந்து வருகிறார்கள்- பர்சானா இல்லாமல் ரேகா  சிறிது நேரம் கூட இருக்க மாட்டார் -இது திரையுலகில் அனைவருக்கும் தெரியும்.’’ என புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரேகாவின் கணவர் முகேஷ் அகர்வாலின் தற்கொலைக்கு பர்சானாவும் காரணம் என்று யாசர் தெரிவித்துள்ளார். பர்சானா, எப்போதும் ஆண்களின் உடையிலேயே இருப்பார். பெரும்பாலும் பேண்ட்- ஷர்ட்டில் பார்க்கலாம். தலைமுடியும் ஆண்கள் போல் வெட்டப்பட்டு இருக்கும்.

ரேகா, நடித்த முதல் இந்திப்படம்- அஞ்சனா சபர்.

அந்தப்பட ஷுட்டிங்கில் தனக்கு நேரிட்ட  அவமானம் குறித்தும் புத்தகத்தில்  மனம் திறந்துள்ளார், ரேகா.

அஞ்சனா சபர் படத்தில் வங்களா நடிகர் பிஸ்வஜீத் சாட்டர்ஜிதான், ரேகாவுக்கு ஜோடி. ரேகாவிடம் தெரிவிக்காமல்  இயக்குனர் ராஜா நவாதே  5 நிமிட முத்தக் காட்சியை படமாக்கினாராம்.

அப்போது என்ன நடந்தது?

‘’இயக்குனர் , ஆக்ஷன் சொன்னதும் ஹீரோ பிஸ்வஜீத் சாட்டர்ஜி என் உதட்டில் முத்தம் கொடுக்க ஆரம்பித்தார். இயக்குனர் கட்  சொல்லவே இல்லை. 5 நிமிடங்கள் எனக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார். அப்போது நான் அழுது கண்ணீர் சிந்தினேன். படக்குழுவினர்  கை தட்டியும், விசில் அடித்தும் ரசித்து,சிரித்தனர்.’’ என அந்த நாள் சம்பவம் குறித்து இப்போது குமுறியுள்ளார், ரேகா.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *