இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின!

Fri, 14 Apr 2023

இந்தோனேசியாவில் இன்று பிற்பகலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.0 என பதிவாகி உள்ளது.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியான டூபன் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில்  7.0 என பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியாக இந்த நிலநடுக்கம் பிற்பகல் 3.25 மணிக்கு இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியில் டூபன் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை இதுவரை விடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதங்கள் மற்றும் உயிர்சேதங்கள் தொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *