உச்சத்தில் யோகி பாபு , காத்துக் கிடக்கும் அஜித் பட இயக்குநர்.

சினிமாவை கனவுத்தொழிற்சாலை என வர்ணிப்பார்கள்.நிஜம்தான்.

ரஜினிக்கு பாட்ஷா என்ற மிகப்பெரிய படம் கொடுத்தவர் இயக்குநர்  சுரேஷ் கிருஷ்ணா.

இதனை  அடுத்து  கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோர் கால்ஷீட் கிடைத்தும்சுமாரான படங்களை கூட அளிக்கவில்லை.

இன்னொரு பாட்ஷாவை தருவார் என நினைத்து பாபா படத்தை , சுரேஷ் கிருஷ்ணாவுக்கு வழங்கினார், ரஜினி.அந்த படம் இரண்டாவது நாளே படுத்துக்கொண்டதும், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்ததால் ரஜினி தண்டம் அழுததும்  தனிக்கதை.

இதனால் கிட்டத்தட்ட  சினிமாவில் இருந்தே விலகி விட்ட  சுரேஷ் கிருஷ்ணா, தொலைக்காட்சி தொடர்களை இயக்கபோய் விட்டார்.

இப்போது ஏன் அந்த கதை என்கிறீர்களா? பல வெற்றிப்படங்கள் தந்த இயக்குநர் எச்.வினோத்  கதையை சொல்லத்தான் இத்தனை பீடிகை.

10 ஆண்டுகளுக்கு முன்பு  சதுரங்க வேட்டை எனும் வித்தியாசமான படத்தை கொடுத்து, கோடம்பாக்கத்தை உற்று நோக்க வைத்தவர் வினோத்.

அஜித்தை வைத்து வரிசையாக நேர்கொண்ட பார்வை, வலிமை. துணிவு என மூன்று ஹிட் படங்கள் தந்தார்.அடுத்து கமல்ஹாசன் படத்தை இயக்குவதாக இருந்தது.

இந்தியன்2 வை முடித்து விட்டு, வினோத்தின் படத்தில் கமல் நடிப்பதாக திட்டம்.ஆனால் கமல், நாக் அஸ்வின் இயக்கும்ப்ராஜெக்ட்கேபடத்துக்கு மொத்தமாக 30 நாள் கால்ஷீட் கொடுத்து விட்டார்.இதனை முடித்து விட்டு பிக்பாக் அடுத்த சீசனுக்கு செல்லும் உத்தேசத்தில் உள்ளார், கமல்.

இன்னும் 3 மாதங்களுக்கு கமலிடம் தேதிகள் இல்லை.

3 மாதங்கள் சும்மா இருப்பதா? என யோசித்த வினோத், காமெடி நடிகர் யோகிபாபுவிடம் ஒரு கதை சொல்லி ஓ.கே.வாங்கி விட்டார்.

ஆனால் யோகிபாபு ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடிக்கமால் வினோத் படத்தில் உடனடியாக நடிக்க முடியாது.

ட்ஜெஸ்ட்செய்து தேதிகள் தருவதாக வாக்கு கொடுத்துள்ளார், யோகிபாபு.

அவரது தேதிகளுக்காக காத்திருக்கிறார், வினோத்.

சினிமாவில் இது போன்ற விநோதங்கள் சகஜம்தான்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *