ஊழல் வழக்கில் பொன்முடியும், மகனும் .. பிடி இறுகுகிறதா?

சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

கடந்த 2006-11ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தினார்கள் என்பது அமைச்சர் பொன்முடி, மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் மீதான புகாராகும்.

எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பொமுடியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான  கவுதம சிகாமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்தது. அவர், அனுமதியை மீறி, 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரி செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, வழக்கை ரத்து செய்வதற்கு மறுத்து விட்டார்.

மேலும்,  ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின்படி, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி, கவுதம சிகாமணியின் கோரிக்கையை நிராகரித்து தீர்ப்பளித்து உள்ளார்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *