ஏப்.16-ல் அதிமுக செயற்குழு கூட்டம் – பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னையில் வரும் 16ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், செயற்குழு கூட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கர்நாடகா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தல் குறித்தும், கழகத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாகவும், அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வருகின்ற 16-ம் ஞாயிற்றுக்கிழமை பகல் 1.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையிலுள்ள தலைமைக் கழகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.

கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் .

இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு முன்பு, ஏப்ரல் 7-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *