காதல் ஜோடியை எரித்து முதலைக்கு தீனியாகப் போட்ட கொடூரக் கதை…

குவாலியர், ஜூன், – 20 . பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் செய்த இளம்பெண்ணையும் காதலனையும் பெண்ணின் குடும்பத்தினர் சுட்டுக்கொன்று கயிற்றில் கட்டி ஆற்று முதலைகளுக்கு தீனியாகப் போட்டுவிட்டனர்.

மத்தியபிரதேச மாநிலத்தின் வடக்கலி உள்ள  மொரேனா மாவட்டத்தில் ஷிவானி என்ற 19 வயது இளம் பெண் பலபு என்ற பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ராதிஷ்யம் என்ற 21 இளைஞரை காதலித்தே இந்த கொடூரத்துக்கு காரணமாகும்.

அடிக்கடி சந்திப்பது, செல்போனில் விடிய, விடிய பேசுவது என்று இவர்களின் காதல் வளர்ந்து வந்தது.

இது ஷிவானியின்  குடும்பத்தினருக்கு தெரியவந்ததால் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.  இதனை பொருட்படுத்தாத ஷிவானி காதலை தொடர்ந்துள்ளார்.  இருவரையும் பிரிக்க எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை.

இந்நிலையில், கடந்த மூன்றாம் தேதி ஷிவானியும் மறுநாள் காதலன் ரதிஷியமும் காணாமல் போய்விட்டனர்.

இதுபற்றி காதலனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தியே போலீசாரே அதிர்ந்துப் போனார்கள்.

ஷிவானியின் தந்தை ராஜ்பால் சிங் தோமரை முறையாக விசாரித்த போது, இருவரையும் சுட்டுக் கொன்று உடல்களில் கல்லைக் கட்டி, முதலைகள் நிறைந்த சம்பல் ஆற்றில் வீசிவிட்டதாக கூறியதே அதிர்ச்சிக்கு காரணமாகும்.  மொரேனா மாவட்டம் வழியா ஓடும் சம்பல் ஆற்றில் முதலைகள் நடமாட்டம் மிகவும் அதிகமாகும்.

நீச்சல் தெரிந்தவர்களை அழைத்து வந்து சம்பல் ஆற்றில் உடல்களை தேடிவருகின்றனர் மத்தியபிரதேச மாநில போலிசார். கொலைப் பசியோடு அலையும் முதலைகளை மீறி ஷிவானி ஜோடியின் உடல் கிடைக்குமா என்று தெரியவில்லை.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *