கோயில் நிலத்தில் கலெக்டர் ஆபிஸ், அதுவும் குத்தகை கொடுக்காமல்.. சும்மா விடுமா கோர்ட் ?

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கடடுவதற்காக குத்தகைக்கு எடுக்கப்பட்ட வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிலத்துக்கான வாடகையை இரு வாரங்களில் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

வாடகைப் பாக்கி ரூ. 57.6 லட்சத்தை வழங்கக் கோரி அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவர் தெய்வீகன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

அர்த்த நாரி கோவிலுக்குச் சொந்தமான 45 ஏக்கர் நிலத்தின் குத்தகைத் தொகையை 2020-ஆம் ஆண்டு ஜூலை முதல் கணக்கிட்டு ஒரு மாதத்திற்குள் கோவில் நிர்வாகத்திற்கு தமிழக அரசு செலுத்தவேண்டும் என்பது உத்தரவாகும். இந்த வாடகைத் தொகையைஇரண்டு வாரங்களில் டெபாசிட் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்து உள்ளனர்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *