கல்லீரல் செயலிழப்பு சிறப்பு சிகிச்சை மையம்

கோவையில் கல்லீரல் செயலிழப்பு சிறப்பு மையம்..! கே.எம்.சி.எச் வளாகத்தில் தொடக்கம்..!! 

ஏப்ரல்.19

கோவையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையம், தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும் என்று மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை வளாகத்தி்ல், கல்லீரல் தொடர்பான அனைத்து  நோய்களையும் குணப்படுத்துவது மற்றும் மாற்று கல்லீரல் தேவைப்படும் நோயாளிகளுக்கான  பிரத்யேக சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் தலைவர் மற்றும்  நிர்வாக இயக்குனர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில்,  பிரத்யேக கல்லீரல் செயல் இழப்பு பிரிவை தமிழக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதாகர், கொரோனா காலகட்டத்திற்கு பிறகு, சிறிய அளவிலான பிரச்னைகளுக்கும் மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சிப்பவர்களை காப்பாற்றுவது பெரும் சவாலாக உள்ளது. விஷம் அருந்தி  தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்ற இந்த சிகிச்சை மையம் பேருதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *