சட்டம்ஒழுங்கு பிரச்சனை விஷ சாராய மரணங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் – தமிழகம் முழுவதும் இன்று நடத்துகிறது அதிமுக

மே.29

தமிழகத்தில் நடைபெற்ற விஷசாராய மரணங்கள், சட்டம்ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பிரச்சனைகளைக் கண்டித்து அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பு அதிமுக சார்பில் இன்று நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயணம் குடித்த 22 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. அதேபோல், திமுக ஆட்சியில் தமிகத்தில் சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்துவிட்டதாக அதிமுக குற்றம்சாட்டிவந்தது. இந்நிலையில், இந்த பிரச்சனைகளை கண்டித்து அதிமுக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சித் தலைமை ஏற்கனவே அறிவித்தது.

அதன்படி, இன்று சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு காலை 10 மணிக்கு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இல்லாத இடங்களில் வட்டாட்சியர் அலுவலகங்கள் அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *