மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா, அண்மைக்காலமாக, ஆன்மிகத்தில் மூழ்கி விட்டார்.

நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா செல்ல இருக்கும் சமந்தா, சினிமாவை விட்டு விலகும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களைத்தவிர, புதிய படங்களில் நடிக்க அவர் யாருக்கும் கால்ஷீட் கொடுக்கவில்லை.

சில இயக்குநர்களிடம் அவர் கதைகள் கேட்க நேரம் ஒதுக்கி இருந்தார்.

அதனை எல்லாம், ரத்து செய்துவிட்டார்.

சிகிச்சை பெற்று அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் அவர் சினிமாவுக்கு முழுக்கு போடுவார் – சாமியார் ஆகப்போகிறார் என கோடம்பாக்கத்தில் செய்திகள் ரெக்கை கட்டி பறக்கின்றன..

கொஞ்ச நாட்களுக்கு முன் வேலூர் தங்க கோவிலுக்கு சென்று வழி பட்டார். அண்மையில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.

கோவையில் உள்ள ஈஷா பவுண்டேஷன் சென்ற சமந்தா,அங்கு கண்ணை மூடி தியானம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கழுத்தில் பூமாலை, நெற்றியில் குங்குமம் என அந்த போட்டோக்களில் சாமியார் போல் காட்சியளிக்கிறார்.

இதையெல்லாம் பார்க்கும் போது சமந்தா, சாமியாராக போகிறார் என உலா வரும் செய்திகளை நம்பத்தான் வேண்டியுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *