சிதம்பரம் நடராஜர் கோயிலில் பதற்றம்.. நடராஜரை வழிபட தீட்சிதர்கள் போட்ட கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக் கூடாது என்ற தீட்சிதர்களின் அறிவிப்புக்கு பக்தர்கள் தெரிவித்துள்ள எதிரப்பு காரணகாக இந்த பதற்றம் மூண்டுள்ளது.

கனகசபை என்பது நடராஜர் வீற்றிருக்கும் இடத்திற்றகு எதிரே உள்ள இடமாகும். முக்கியமானவர்கள் என்று தீட்சிதர்களால் கருதப்படும் பிரமுகர்கள் கனகசபையில் நின்று நடராஜரை வழிபட அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

எந்த முன்னறிவிப்பும் செய்யாமல் கனகசபை மீது ஏறி வழிபடக்கூடாது என்று வைக்கப்பட்ட பதாகையை அதிகாரிகள் அகற்ற முயன்றபோது, தீட்சிதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு மூண்டது.

நாளை ( ஞாயிறு) காலை தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் தற்போது இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
00

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *