சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்? தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் பதில்

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது குறித்து சிபிஎஸ்இ தேர்வு ஆணையம் விளக்கம்.

தமிழக சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் அனுப்பிய கடிதத்துக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இயற்பியல், உயிரியல் படங்கள் மிக கடுமையாக இருந்ததை சுட்டிக்காட்டிய மதுரை எம்பி சு. வெங்கடேசன் குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும் சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சிபிஎஸ்இ தேர்வு ஆணையருக்கு கடிதம் எழுதியிருந்தார். அவர் எழுதிய முதல் கடிதத்துக்கு வந்த பதிலில் திருப்தி இல்லாததால் அடுத்து இரண்டாவது கடிதம் எழுதி அனுப்பினார். அதற்கு சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாடு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு இயற்பியல் & உயிரியல் பாடங்களுக்கான கேள்வித்தாள்கள் கடுமையாக இருந்தன; ஆகவே மாணவர்கள் பாதிக்கப்படாமல் தேர்வுத் தாள் திருத்தம் அமையவேண்டும்; இப்படி குறிப்பிட்ட மாநில/ மண்டல மாணவர்கள் கேள்வித் தாள் கனத்தால் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று மார்ச் 20, 2023 அன்று கடிதம் எழுதி இருந்தேன்.

அதற்கு சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் டாக்டர் சன்யாம் பரத்வாஜ் எழுதிய 25.03.2023 தேதியிட்ட பதில் (CBSE/CE/PPS/2023) பொத்தாம் பொதுவாக “செயலூக்கம் உள்ள உள் கட்டமைப்பு” (Robust internal system) எங்கள் வசம் இருக்கிறது; இது பாட நிபுணர்களின் ( Subject experts) கருத்துக்களையும் உள்ளடக்கி முடிவெடுக்க கூடியது” என்று கூறி இருந்தார். குறிப்பிட்ட பிரச்சினை உங்கள் கவனத்திற்கு வந்ததா? மாணவர்களின் குறை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? வெவ்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு கனத்தில் கேள்வி தாள் இருப்பது சரியா? என்று மீண்டும் 19.04.2023 அன்று கடிதம் எழுதினேன்.

சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் டாக்டர் சன்யாம் பரத்வாஜ் அவர்களிடம் இருந்து மீண்டும் பதில் (CBSE/CE/PPS/2023/24.04.2023) வந்துள்ளது.

“தேர்வுத் தாள் திருத்தம் நடந்து கொண்டு இருப்பதாகவும், திருத்தம் முடிந்து தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக மாணவர்களின் மதிப்பெண் விவரங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாணவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்குமென்று எதிர்பார்க்கிறோம் என அவர் அதில் கூறியுள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *