தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – 9.76 லட்சம் மாணவ-மாணவியர் எழுதினர்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மாநிலம் முழுவதும் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர்.

தமிழக பள்ளிக்கல்வியில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரர்.3-ம் தேதிவரை நடைபெற்றுமுடிந்தது. அதேபோல, மார்ச் 14-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வும் நேற்றுடன் (ஏப்ரல்.5) நிறைவடைந்தது.

இதைத் தொடர்ந்து, 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மொழிப்பாடத் தேர்வு நடைபெற்றது. இதை, மாநிலம் முழுவதிலும் இருந்து 9.76 லட்சம் மாணவ-மாணவியர் எழுதினர். இந்த பொதுத்தேர்வு ஏப்.20-ம் தேதி வரை இந்தத் தேர்வானது, தமிழகம், புதுச்சேரியில் 4,216 மையங்களில் நடைபெறுகிறது.

தேர்வு எழுதும் 9.76 லட்சம் பேரில் 37,798 பேர் தனித்தேர்வர்கள், 13,151 பேர் மாற்றுத் திறனாளிகள், 5 பேர் மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 2,640 சிறை கைதிகள் அடங்குவர். பொதுத்தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 55,000 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் 4,235 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, அதிகபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடைவிதிக்கப்படும். மேலும், ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த பள்ளி நிர்வாகம் முயன்றால், அதன் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *