தமிழகம் – ஆந்திரா எல்லையில் 14.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்…

தமிழகம் – ஆந்திரா எல்லையில் எலாவூர் சோதனை சாவடியில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் நடத்திய வாகன சோதனையில் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 14.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. எலாவூர் சோதனைச் சாவடியில் போதை தடுப்பு போலீசார் வழக்கம் போல வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்து ஒன்றை சோதனையிட்ட போது, சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த சரவணன், காளிமுத்து ஆகிய இருவரின் பையில், கிலோ கணக்கில் தங்க நகை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். விசாரணையில் அவர்கள் விசாகப்பட்டினம் சென்று தங்க நகைகளை மாடல் காண்பித்து விட்டு மீண்டும் சேலம் செல்வதற்காக சென்னை வந்ததாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், அவர்களிடம் நகைக்கான உரிய ஆவணங்கள் இல்லாததை உறுதி படுத்திய போலீசார், அவர்கள் வைத்திருந்த 14.5 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்து, வியாசர்பாடி போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து ஆவணங்கள் இன்றி நகைகள் கொண்டு வரப்பட்டது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *