*அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணையின் போது போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று அமலாக்கத் துறை அறிக்கை… குற்றச்சாட்டுகளுக்கான ஆதராங்களை காட்டி கேள்வி கேட்டபோது மறுக்கவில்லை என்றும் விளக்கம்.

* கடந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து மாற்றம்… எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளுக்கு உரிய சிறப்பு நீதிமன்றம் இனி விசாரிக்கும்.

*சந்திராயன்- 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்ததாக இ்ஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவிப்பு.. விண்கலத்தை திட்டமிட்டபடி ஆகஸ்டு 23- ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கவும் நடவடிக்கை.

*மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு இதுவரை ஒரு கோடியே 54 லட்சம் பேர் விண்ணப்பம் .. எஞ்சியவர்கள் விண்ணப்பங்களை பெறுவதற்கு நாளை முதல் 20- ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அரசு அறிவிப்பு.

*தமிழ்நாட்டை திமுக நிரந்தரமாக ஆளவேண்டும் என்ற கலைஞரின் கனவை நிறைவேற்றிக் காட்ட வேண்டும்.. ராமநாதபுரத்தில் நடைபெற்ற தென்மாவட்ட திமுக வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

*வறட்சி மாவட்டமாக இருந்த ராமநாதபுரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றது திமுக ஆட்சிதான் என்று மு.க.ஸ்டாலி பேச்சு.. வளர்ச்சித் திட்டங்களையும் பட்டியலிட்டார் முதலமைச்சர்.

*பரமக்குடி பாஜக நிர்வாகி முத்துலிங்கம் வீட்டிலேயே சிறைவைப்பு .. முதலமைச்சரின் ராமநாதபுரம் மாவட்ட நிகழ்ச்சிகள் பற்றி வளைதளத்தில் அவதூறு கருத்து பரப்பியதால் காவல் துறை நடவடிக்கை

*மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலுக்குள் அடுத்த 15 நாட்களுக்குள் பட்டியலின மக்களை அழைத்துச் செல்ல நடவடிக்கை .. விழுப்புரத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு.

*சென்னையில் அண்ணா நகரில் போதையில் இருந்த ஓட்டுநர் அரசு பேருந்தை கார் மீது மோதி விபத்து… காரில் பயணம் செய்த பெண் தட்டிக் கேட்டதால் பேருந்தை சாலையில் நிறுத்திவிட்டு ஓட்டம்.

*விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடை பெறும் அகழாய்வில் தங்கத் தாலி கண்டெடுப்பு… அந்தக் காலத்திலேயே தாலியை கலை நயத்துடன் செய்து இருப்பது கண்டு ஆய்வாளர்கள் வியப்பு.

*சென்னையில் ஒரே இடத்தில் 15 நாட்களுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் …மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை.

*என்.எல்.சி. நிலக்கரி சுரங்கங்களில் தொழிலாளர்கள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு .. பாதிக்கப் படுகிறவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருவதாக என்.எல்.சி. தரப்பில் உறுதி.

*மதுரையில் நடைபெற உள்ள மாநாடு பற்றி அதிமுக தீவிர பிரச்சாரம் .. தொடர் ஓட்டங்கள், பிரச்சார வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு தெரிவிக்க ஆங்காங்கு நடவடிக்கை.

*கோயம்புத்தூரில் கைக்குழந்தையுடன் காலில் விழுந்து இடமாறுதல் கேட்ட பேருந்து ஓட்டுநர் கண்ணன் , அவர் விரும்பிய தேனிக்கு மாற்றம் .. போக்கு வரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நடவடிக்கை.

*கும்மிடிப்பூண்டி அருகே பட்டாக் கத்தி உடன் மிரட்டல் வீடியோ எடுத்து வலை தளங்களில் பதிவு … மூன்று பேரை கைது செய்த போலீஸ் மேலும் ஒருவருக்கு வலைவீச்சு.

*மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான டெண்டர் கோரியது மத்திய அரசு … ஜப்பான் நிறுவனம் கடன் வழங்கியதை அடுத்து 33 மாதங்களில் கட்டி முடிக்க உள்ளதாக தகவல்.

*மத்திய பிரதேச மாநிலத்தில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது பாரதீய ஜனதா .. சத்தீஷ்கர் மாநிலத்திற்கும் 21 வேட்பாளர்கள் பெயரை வெளியிட்டு அதிரடி.

*நாட்டிற்கு செய்த சேவைக்காக ஜவகர்லால் நேரு பெயர் என்றென்றும் நினைவுக் கூறப்படும் .. டெல்லியில் உள்ள நேரு அருங்காட்சியகத்தின் பெயரை மத்திய அரசு குறித்து ராகுல் காந்தி கருத்து.

*பெரியார், அம்பேத்கர் கருத்துகளை தமது பேச்சால் வளப்படுத்துகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் .. பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.

*திருப்பதி மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை கூண்டில் சிக்கியது .. நடைபயணமாக செல்லும் பக்தர்கள் பாதுகாப்புக்காக கைத்தடி வழங்குவதும் தொடருகிறது.

*நடிகர் ரஜினிகாந்தி நடித்த ஜெயிலர் படம் உலகம் முழுவதும் முதல் ஒரு வாரத்தில் 375 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை .. தமிழ் சினிமாப் படங்களிலேயே இதுவே அதிகப்பட்ச வசூல் என்று சன் பிக்சர்ஸ் அறிவிப்பு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *