“தளபதி 68 சும்மா தெறிக்கும்”-விஜய் படம் பற்றி வெங்கட் பிரபு.

ஜுலை- 31-

இளையதளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

விஜய் ஜோடியாக  த்ரிஷா நடிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், இயக்குநர்கள்  மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட  பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

விஜய் தனது போர்ஷன்களை முடித்துக்கொடுத்து விட்டார். எஞ்சிய கட்சிகளின்  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 68-வது படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  இந்நிலையில், வெங்கட் பிரபு “நண்பன் ஒருவன் வந்த பிறகு” என்ற படத்தின் அப்டேட் டை நேற்று  வெளியிட்டார். விஜய் படத்தின் அப்டேட் என நினைத்து அதனை ஆவலுடன்  பார்த்த விஜய் ரசிகர் ஏமாற்றம் அடைந்தார்.

தனது ஏமாற்றத்தை அந்த ரசிகர் ட்விட்டரில் பதிவு செய்து வெளியிட்டார். அதற்கு  ட்விட்டரில் இயக்குநர் வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார், “தளபதி 68 சும்மா தெறிக்கும். காத்திருங்கள்” என்று  அவர் குறிபிட்டு உள்ளார்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *