திருப்பூர் துரைசாமி கடிதத்தை புறக்கணிக்க வேண்டும்- துரை வைகோ

மதிமுகவை திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சாலசிறந்தது என்று திருப்பூர் துரைசாமி வைகோவிற்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், மகனை அரவணைப்பதும் சந்தர்ப்பவாத அரசியலும் எள்ளி நகையாட வைத்து விட்டது எனவும் வைகோவை கடுமையாக சாடும் வகையிலும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

துரைசாமியின் இந்த அறிக்கை மதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ இது தொடர்பாக தந்தி டிவிக்கு பேட்டி அளித்துள்ளார். துரை வைகோ அளித்த பேட்டியில், ” கட்சியின் பொதுக்கூட்டத்தில் விவாதிக்க வேண்டியதை பொதுவெளியில் வெளியிடுவது முறையல்ல. மதிமுக – திமுக இணைப்பு தொடர்பாக துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்க வேண்டும்” என்றார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *