தேசிய திரைப்பட விருது… கண்ணீர் விட்டு அழுத புஷ்பா பட இயக்குனர்…

ஆகஸ்டு, 27

69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் டெல்லியில் இரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமாவிற்கு 6 விருதுகள் மட்டுமே கிடைத்துள்ளது.

‘புஷ்பா’ தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் புஷ்பா பட இயக்குனர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜுனை சந்தித்து தேசிய விருது வென்றதற்காக மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார். அப்போது அளவு கடந்த சந்தோஷத்தில் சுகுமார் கண்ணீர் விட்டு அழுது அல்லு அர்ஜுனை கட்டிப்பிடித்து உருகும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது.

சிறந்த இசை அமைப்பாளர் விருது ஆர்.ஆர்.ஆர்.படத்துக்கு இசை அமைத்த கீரவாணிக்கும், புஷ்பா படத்துக்கு இசை அமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், தேசிய விருது பட்டியலில் இடம் பிடித்ததைத் தொடர்ந்து இளையராஜா சாரிடம் சென்று ஆசிபெற்றேன். நீங்கள் கொடுத்த அனைத்து உத்வேகத்திற்கும் நன்றி இளையராஜா சார். அதுவே என்னை தேசிய விருதிற்கு அழைத்து சென்றது என்று பதிவிட்டுள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *