தொழிலாளர் நல மசோதா - நாளை ஆலோசனை

தொழிலாளர் நலத்துறை மசோதா – தலைமைச்செயலகத்தில் நாளை தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை

ஏப்ரல்.23

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தொழிலாளர் நலத்துறை மசோதா குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் தொழிற்சாலைகள் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதன் முக்கிய அம்சங்கள், முதலீடுகள், வேலைவாய்ப்புகள் குறித்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர் ஆகியோர் விரிவாக விளக்கம் அளித்ததாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துகளைத் தெரிவித்து வருவதால், நாளை மதியம் 3 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *