“நெக்ஸ்ட்”- தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடவேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

June 13, 23

“நெக்ஸ்ட்” என்ற தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை மத்திய அரசு கைவிடவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், “நெக்ஸ்ட்” தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். இதனால் “நெக்ஸ்ட்” தேர்வு முறையினைக் கைவிட வேண்டுமென்றும், தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *